இலங்கை 2017 ஆம் ஆண்டு சித்திரவதைக்கு எதிரான ஒப்பந்தத்தின் விருப்ப நெறிமுறையில் (OPCAT) இணைந்ததைத் தொடர்ந்து 2019 ஏப்ரல் மாதம் SPT தனது முதல் விஜயத்தை மேற்கொண்டிருந்தது. அதன்படி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தேசிய தடுப்பு அமைப்பாக நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது, ஐ.நா. சித்திரவதை தடுப்பு குழு அமைச்சரவை மட்ட அதிகாரிகள், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் சந்திப்புகளை நடத்தவுள்ளது.
மேலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.
ஐ.நா.வுடன் தொடர்ச்சியான ஒத்துழைப்பை முன்னெடுத்து வரும் தனது கொள்கைக்கு அமைவாக இந்த விஜயத்தில் இலங்கை அரசு திறந்த, ஆக்கபூர்வ மற்றும் வெளிப்படையான அணுகுமுறையை கடைப்பிடிக்கும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
மாலைத்தீவைச் சேர்ந்த ஆயிஷா ஷுஜூன் முஹம்மது தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவில் போலந்து, குரோஷியா மற்றும் ஜோர்ஜியாவைச் சேர்ந்த உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் ஜெனீவாவில் உள்ள SPT செயலக அதிகாரிகளும் இணைந்து செயற்படவுள்ளனர்.





























