Tag: human rights
ஊடகவியலாளர் போராட்டம், படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதையும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் சுயாதீனமான மற்றும் நம்பகமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று (31) ஊடகவியலாளர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டம் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் டாக்டர் கௌசல்யா ஆரியரத்னவின் இருநாள் யாழ்ப்பாணப் பயணத்துடன் இணைந்தே முன்னெடுக்கப்பட்டது. மாவட்ட […]
இலவச UK விசா 2026 தொடர்பாக இங்கிலாந்து அரசு புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே இங்கிலாந்தில் தங்கியிருந்து தங்களது தங்கும் அனுமதியை நீட்டிக்க விண்ணப்பிக்கும் சிலருக்கு விசா விண்ணப்பக் கட்டணத்தில் Visa Fee Waiver விலக்கு வழங்கப்படலாம். இந்த சலுகை வெளிநாட்டிலிருந்து முதல் முறையாக விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு பொருந்தாது. அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி கீழ்க்கண்ட 5 பிரிவினருக்கு Visa Fee Waiver பெற தகுதி இருக்கலாம் விண்ணப்பதாரரின் வருமானம், சேமிப்பு, மாதாந்திர செலவுகள் மற்றும் குடும்ப […]
Semmani Mass Grave, மனித புதைகுழி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையில் இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் சட்ட நடைமுறைகளுக்குட்பட்டும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறினார். எந்தவித அழுத்தங்களும் இன்றி உண்மையை […]
சவூதி தண்டனை, விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜனை மனிதாபிமான அடிப்படையில் விடுவிப்பதற்காக இலங்கை அரசு உடனடி இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் எந்த மதத்தையும் அதன் புனித ஆளுமைகளையும் அல்லது மத நம்பிக்கைகளையும் அவமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்றும் அனைத்து மதங்களும் பரஸ்பர மரியாதை, மனித கண்ணியம் சகிப்புத்தன்மை மற்றும் சமாதானத்தை போதிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய சமூக ஊடக […]
மனித உரிமை விசா வழக்குகள், ஜெர்மனியின் அரசியலமைப்பு நீதிமன்றம் ஆப்கானிஸ்தான் மனித உரிமை அடிப்படையிலான விசா மற்றும் மீள்குடியேற்ற திட்டங்களில் இடம்பெற்றுள்ள விண்ணப்பங்களை ஒரே முடிவின் மூலம் ரத்து செய்ய முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது. ஒவ்வொரு விண்ணப்பதாரரின் சூழ்நிலையும் தனித்தனியாக மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இந்த வழக்கு, 2021 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட “Human Rights List” திட்டத்தின் கீழ் ஜெர்மனியில் குடியேற அனுமதி பெற்றிருந்த ஒரு ஆப்கான் குடும்பம் தாக்கல் செய்த […]
செம்மணி புதைகுழி யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் 41ஆவது நாளாக இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட நிலையில் மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்மூலம் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களை உள்ளடக்கிய 95 நாட்கள் அகழாய்வில் மொத்தம் 478 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் 464 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இன்றைய அகழாய்வில் மூன்று என்புக் குவியல்கள் ஆணிகள் மற்றும் சீமெந்து துண்டு ஒன்றும் கண்டறியப்பட்டன. இதற்கிடையில் 467ஆவது […]
பிரிட்டன் அகதி குடும்ப இணைப்பு, பிரிட்டனில் அகதிகள் தங்களது குடும்ப உறுப்பினர்களை சட்டபூர்வமாக அழைத்து வர பயன்படுத்தப்பட்ட Refugee Family Reunion திட்டம் தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டிருப்பதால் 16,000 க்கும் மேற்பட்ட அகதிகள் தங்கள் குடும்பத்தினருடன் இணைய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக அகதி அமைப்புகள் எச்சரித்துள்ளன. தகவல்களின்படி இந்த இடைநிறுத்தம் காரணமாக சுமார் 9,273 குழந்தைகளும் மற்றும் 5,835 பெண்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பிரிந்து வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் இன்னும் போர் மற்றும் பாதுகாப்பற்ற பகுதிகளில் […]
இத்தாலியின் தொழிலாளர் சுரண்டல், விவசாயத் துறையில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் நவீன அடிமைத்தனத்தை ஒத்த சூழலில் வேலை செய்ய வைக்கப்படுவதாக புதிய குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் மனித உரிமை அமைப்புகள் மற்றும் தொழிலாளர் சங்கங்களிடையே மீண்டும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. அறிக்கைகளின்படி சில தொழிலாளர்கள் மிகவும் குறைந்த ஊதியம் நீண்ட நேர வேலை பாதுகாப்பற்ற தங்குமிடங்கள் போதிய ஓய்வு இல்லாமை மற்றும் சட்டப்பூர்வ வேலை ஒப்பந்தங்கள் இன்றி பணியாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிலர் இடைத்தரகர்கள் […]
பிரிட்டன் அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய Immigration and Asylum Bill 2026 தொடர்பாக மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இந்த மசோதாவின்படி மனிதக் கடத்தல் அல்லது நவீன அடிமைத்தனத்திற்கு ஆளானவர்கள் தாங்கள் பாதிக்கப்பட்டதாக தாமதமாக தெரிவித்தால் அவர்களுக்கு தற்போது வழங்கப்படும் சில சட்டப் பாதுகாப்புகள் மற்றும் உதவிகள் மறுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உண்மையான பாதிக்கப்பட்டவர்களே பாதுகாப்பை இழக்கும் அபாயம் இருப்பதாக அமைப்புகள் எச்சரிக்கின்றன. மேலும், புகலிட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட குடும்பங்கள் குழந்தைகள் உட்பட […]
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த கைதிகளின் மரணங்கள் தொடர்பாக சுயாதீனமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று (16) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். சிறைச்சாலை அதிகாரிகள் மீதான தாக்குதல்களும் உயிரிழப்புகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றாலும் காவலில் இருந்த கைதிகள் மற்றும் சந்தேகநபர்களின் மரணங்கள் குறித்தும் சம அளவில் உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். சிறைச்சாலைகளில் […]