வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் சட்டமா அதிபர் திணைக்களம் 2022ஆம் ஆண்டு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் வழக்கின் விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா தீர்ப்பை வழங்கினார்.
அரச சட்டத்தரணி நான்கு பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுகளையும் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபித்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் ரூ.3 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.12 இலட்சம் இழப்பீடு வழங்கவும் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் ரூ.25,000 வீதம் மொத்தம் ரூ.1 இலட்சம் நீதிமன்ற அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டது.
பாதுகாக்க வேண்டிய தந்தையே குற்றத்தை இழைத்துள்ளதால் எந்தவித கருணையும் காட்டாமல் அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.




























