கிழக்கு ஜாவாவில் உள்ள சுரபயா துறைமுகத்திலிருந்து சனிக்கிழமை புறப்பட்ட கப்பல், போர்னியோ தீவில் உள்ள பஞ்சர்மசினை நோக்கிச் சென்றது. கப்பல் உரிமையாளர்கள் அளித்த தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
கடற்படை மற்றும் காவல்துறை மீட்பு நடவடிக்கை
பஞ்சர்மசின் தேடல் மற்றும் மீட்பு அமைப்பின் தலைவர் I Putu Sudayana, கப்பலுடனான தொடர்பு இழப்பு குறித்து தகவல் கிடைத்தவுடன் அதிகாரிகள் அனுப்பப்பட்டதாக கூறினார். கப்பலின் கடைசியாகக் கணிக்கப்பட்ட நிலை, பஞ்சர்மசின் துறைமுகத்திலிருந்து சுமார் 80 கடல் மைல்கள் தொலைவில், அதாவது 150 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஜாவா கடல் பகுதியில் இருந்தது.
ஞாயிற்றுக்கிழமை காலை மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. இதில் கடற்படை, காவல்துறை மற்றும் கப்பல் நிறுவனம் இணைந்துள்ளன. Virgo Transport 8 ferry-யை கண்டறிய அதன் கடைசியாக அறியப்பட்ட நிலையை மையமாகக் கொண்டு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
17,000-க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் கடல் போக்குவரத்து முக்கியமானதாக உள்ளது. ஆனால் பாதுகாப்பு விதிமுறைகள் போதாமை மற்றும் கணிக்க முடியாத வானிலை காரணமாக கடல் விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன.



























