மாணவியின் புகாரைத் தொடர்ந்து காவல் நடவடிக்கை
அரும்பாக்கத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி, இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தி வந்தார். அவரது இன்ஸ்டாகிராம் கணக்குக்கு தொடர்ந்து காதல் மெசேஜ்கள் வந்துள்ளன. இதையடுத்து, அந்த மெசேஜ்களை அனுப்பியவர் யார் என்பதை மாணவி விசாரித்தார். அப்போது, அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றும் மூர்த்திதான் மெசேஜ்களை அனுப்பியதாக தெரியவந்தது.
இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடமும் ஆசிரியர் மூர்த்தியிடமும் இனி இதுபோல் நடந்து கொள்ள வேண்டாம் என்று எச்சரித்தனர். ஆனால் அதற்குப் பிறகும் அவர் மாணவிக்கு முன்பைவிட அதிகமாக ஆபாச மெசேஜ்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. குறிப்பாக, “ஐ லவ் யூ” என்றும் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
இதையடுத்து மாணவி தரப்பில் அரும்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் நடத்திய விசாரணையில், மாணவிக்கு ஆசிரியர் மூர்த்தி ஆபாச மெசேஜ்கள் அனுப்பியது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து Chennai POCSO case பதிவு செய்து, அவரை போலீஸார் கைது செய்தனர்.





























