மேலும் ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) கொடுப்பனவுகள் தொழிலாளர் சட்டங்களுக்கு இணங்க முறையாக செலுத்தப்பட்டுள்ளனவா என்பதையும் ஆராயுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இயங்கி வரும் 12 கிளைகளிலும் தொழில் திணைக்கள அதிகாரிகள் குழு ரீதியான பரிசோதனைகள் மற்றும் ஒருங்கிணைந்த ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதுடன் கடந்த காலத்தில் மூடப்பட்ட கிளைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு சட்டப்படி வழங்கப்பட வேண்டிய இழப்பீடுகள் நட்டஈடுகள் மற்றும் தொழில்சார் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதும் விசாரணைக்கு உட்படுத்தப்படும்.
அதேபோல் தற்போதைய ஊழியர்களிடமிருந்து பணிச்சூழல் வேலை நிபந்தனைகள் தொழில்துறை தகராறுகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த தகவல்களும் நேரடியாகப் பெறப்படவுள்ளன. விசாரணையின் போது சேகரிக்கப்படும் அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய முழுமையான அறிக்கையை ஜூலை 7ஆம் திகதிக்குள் தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்கவிடம் சமர்ப்பிக்குமாறு தொழில் திணைக்களத்திற்கு அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.




























