பிரான்ஸ் ஊடகமான “La France en face” நிகழ்ச்சியின் முடிவில் பேசிய வலதுசாரி அரசியல் தலைவி மரீன் லெ பென், “இஸ்லாமிய தீவிரவாதமும் போதைப்பொருள் கடத்தலும் (நர்கோடிராஃபிக்) — இவை இரண்டும் ஒன்றிணையும் நிலை தான் இன்று பிரான்ஸை அச்சுறுத்தும் மிகப்பெரிய அபாயம்” என்று தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் சமூக அமைதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், கட்டுப்பாடற்ற குடியேற்றம் தீவிரவாத சிந்தனைகள் மற்றும் போதைப்பொருள் வலையமைப்புகள் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு செயல்படுவதாக குற்றம்சாட்டினார். மேலும் இந்த சவால்களை எதிர்கொள்ள அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் சட்டம்-ஒழுங்கை மீட்டெடுப்பதே முதன்மை இலக்காக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading