பிரான்ஸின் முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான பாரிஸ்–ஓர்லி விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்தும் நோக்கில் ‘ஆபரேஷன் 100%’ என்ற சிறப்பு நடவடிக்கை செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 3) தொடங்கப்பட்டது.
இந்த நடவடிக்கையின் கீழ் சுமார் 400 காவல் துறை அதிகாரிகள் ஜென்டார்மரி மற்றும் சுங்க அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குடியரசுத் தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் சமீபத்தில் அறிவித்த பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன் முதல் கட்டமாக மார்டினிக் தீவிலுள்ள ஃபோர்ட்-டி-பிரான்ஸ் நகரிலிருந்து வந்த விமானம் முழுமையாகவும் முறையாகவும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. விமான நிலையங்களில் போதைப்பொருள் கடத்தலை முற்றிலும் ஒழிக்க இந்த நடவடிக்கை முக்கியமானதாக கருதப்படுகிறது.





Leave a Reply