ஒத்த வகையான ஒழுங்குபடுத்தப்பட்ட சேமிப்புக் கணக்குகளை ஒன்றுக்கு மேல் வைத்திருப்பது சட்டப்படி தடைசெய்யப்பட்ட நிலையில் நகல் கணக்குகளைத் தடுக்க வங்கிகள் கட்டாய சரிபார்ப்பு செய்ய வேண்டும் என்ற விதி ஜூலை 1, 2027 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாணய மற்றும் நிதிக் குறியீட்டின் படி ஒரே நபர் பல சேமிப்புக் கணக்குகள் அல்லது ஒரே மாதிரியான ஒழுங்குபடுத்தப்பட்ட சேமிப்புத் திட்டங்களை வைத்திருப்பது அனுமதிக்கப்படாது இருப்பினும் பெற்றோர் முன்பு திறந்த கணக்குகள் அல்லது வங்கி மாற்றங்கள் காரணமாக பலர் அறியாமலேயே நகல் கணக்குகளை வைத்திருக்கின்றனர்.

இதனைத் தடுக்கும் வகையில் மார்ச் 12, 2021 அன்று வெளியிடப்பட்ட ஆணை மூலம் வங்கிகள் வரி அதிகாரிகளிடம் விசாரித்து நகல் கணக்குகளை சரிபார்க்க அனுமதி வழங்கப்பட்டது. முதலில் 2024 ஜனவரி 1 அன்று அமலுக்கு வரவிருந்த இந்த நடைமுறை 2026 ஆகவும் பின்னர் டிசம்பர் 26, 2025 அன்று வெளியான புதிய ஆணை மூலம் 2027 ஜூலை 1 ஆகவும் ஒத்திவைக்கப்பட்டது.

வங்கிகளுக்கிடையே தானியங்கி தகவல் பரிமாற்றம் செய்ய தேவையான தொழில்நுட்ப அமைப்புகள் இன்னும் முழுமையாக செயல்படாததே இந்த தாமதத்திற்குக் காரணம் என பிரெஞ்சு வங்கி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Contact NS (Nerikkalam.Info)

வணக்கம்
உங்களுடைய அவசர தேவை கருதி நீங்கள் நிரோஷ் சந்துருவை தொடர்புகொள்ள விரும்புகிறீர்கள்,

Nirosh_Santhuru

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading