நெதர்லாந்தில் ATM கொள்ளை வழக்கு, 9 பேர் கைது
நெதர்லாந்தில் நடந்த தொடர்ச்சியான ATM (பணமெடுக்கும் இயந்திரம்) கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெர்மனி பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து போலீசாருடன் இணைந்து நடத்தப்பட்ட சர்வதேச விசாரணையின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போலீசார் தெரிவித்ததாவது இந்த குழு பல நாடுகளில் உள்ள ATM இயந்திரங்களை வெடிகுண்டுகள் பயன்படுத்தி உடைத்து பணம் கொள்ளையடித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
குறிப்பாக ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் பல இடங்களில் இவர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
விசாரணையின் போது நெதர்லாந்து போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வெடிபொருட்கள் பணம் மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த நடவடிக்கையில் சிலர் ஏற்கனவே கடந்த ஆண்டின் இறுதியில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யூரோப் முழுவதும் ATM கொள்ளைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த வகை குற்றச்செயல்களை கட்டுப்படுத்த பல நாடுகள் இணைந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
போலீசார் தற்போது இந்த குழுவின் மற்ற தொடர்புகள் மற்றும் பின்னணி குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





Leave a Reply