இந்த நிதி மூலம் பல மாவட்டங்களில் உள்ள பாடசாலை மாணவர் விடுதிகள் புதுப்பிக்கப்பட்டு தங்குமிட வசதிகள் சுகாதார வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட உள்ளன. குறிப்பாக தொலைதூர மற்றும் கிராமப்புற பகுதிகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு தரமான தங்குமிட வசதிகளை வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
மாணவர்களின் கல்விச் சூழலை மேம்படுத்தி சமமான கல்வி வாய்ப்புகளை உறுதி செய்வதற்கான அரசின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




























