Tag: Students
பிரான்சில் 2 இலட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படும் வீட்டு உதவித் தொகையைக் கணக்கிடும் முறையில் மாற்றம் கொண்டுவரும் புதிய பரிந்துரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தால் சுமார் 2 இலட்சம் மாணவர்கள் தங்களது வீட்டு உதவியை முழுமையாக இழக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் தயாரிக்கப்பட்ட செலவின ஆய்வு அறிக்கையில் மாணவர்களுக்கான APL வீட்டு உதவியைக் கணக்கிடும்போது அவர்களது பெற்றோரின் வருமானத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நடைமுறையில், […]
பிரான்சில் புதிய நடைமுறை விதியின் கீழ் மாணவரின் குடும்ப உறுப்பினர் ஒருவரின் நடத்தை ஆசிரியர்கள் அல்லது கல்விச் சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் உடல்நலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் அந்த மாணவரை வேறு கல்வி நிலையத்திற்கு மாற்றுவதற்கான புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜூலை 28ஆம் திகதிய Décret n° 2026-687 அடிப்படையில் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஆணை ஜூலை 29ஆம் திகதி Journal officiel ல் வெளியிடப்பட்டது. இது மழலையர் பள்ளி ஆரம்பப் பள்ளி collège மற்றும் […]
விடுமுறை, நிலவும் சீரற்ற வானிலை மற்றும் பலத்த மழையை முன்னிட்டு கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளுக்கும் நாளை (04.08.2026) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் இந்த முடிவை அறிவித்துள்ளார். இதேவேளை ஹட்டன், கொத்மலை, நுவரெலியா, கம்பளை, கண்டி மற்றும் தெல்தெனிய கல்வி வலயங்களில் தேவைக்கேற்ப பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் திகதி […]
Peradeniya University, நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்விச் செயற்பாடுகளும் மற்றும் பரீட்சைகளும் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இருப்பினும் அத்தியாவசிய சேவைகள் வழமையானபடி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பாக சொந்த ஊர்களுக்குச் செல்லக்கூடிய மாணவர்கள் அவ்வாறு செல்லலாம் என்றும் பயணிக்க முடியாதவர்கள் சரசவி மெதுர விடுதியைத் தவிர்ந்த ஏனைய பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆபத்தான தனியார் தங்குமிடங்களில் […]
2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (G.C.E. O/L) பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி எந்தக் காரணத்திற்காகவும் நீட்டிக்கப்படாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி அனைத்து பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களும் தங்களது விண்ணப்பங்களை எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதிக்குள் இணையவழி மூலம் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். இதேவேளை தேசிய அடையாள அட்டையை […]
டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடம் நாளை முதல் ஒரு வார காலத்திற்கு அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் இணையவழியில் நடத்த தீர்மானித்துள்ளது. மாணவர்களின் கோரிக்கைகள் மற்றும் தற்போதைய சுகாதார நிலைமையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அதேவேளை பல்கலைக்கழகம் வழக்கம்போல் செயல்படும் என்றும் அனைத்து கல்வி மற்றும் நிர்வாக ஊழியர்களும் பணிக்கு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மாணவர் […]
நாட்டில் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் முக்கிய நடவடிக்கையை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி பாடசாலை மாணவர்கள் வழக்கமான சீருடையுடன் இணைந்து கைகளையும் கால்களையும் முழுமையாக மறைக்கும் பொருத்தமான ஆடைகளை அணிந்து வர அனுமதிக்கப்படுவார்கள் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ தெரிவித்துள்ளார். தற்போதைய டெங்கு அபாய நிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன் இதுகுறித்து அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற […]
இலங்கையில் டெங்கு மற்றும் காய்ச்சல் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கொழும்பு கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் எதிர்வரும் 13ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் டி.ஆர். மதுர செனெவிரத்ன மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.எல். வசந்தகுமார தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக விடுதிகளும் இந்தக் காலப்பகுதியில் முழுமையாக மூடப்பட்டிருக்கும் நிலையில், இராஜகிரிய மற்றும் தெஹிவளை பகுதிகளில் உள்ள […]
நாட்டில் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இளைஞர்கள், யுவதிகள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எச்.ஐ.வி மற்றும் பாலியல் ரீதியாக பரவும் தொற்றுநோய்களின் பரவல் அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதால் அதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பல்துறை ரீதியான அவசர நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர் சமீபத்திய சுகாதாரப் புள்ளிவிபரங்களின்படி பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடையிலும் எச்.ஐ.வி தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயமாக இருப்பதாக குறிப்பிட்டார். […]
உயர்தரப் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மேலதிக கால அவகாசம் வழங்க கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரினி அமரசூரிய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் தற்போதைய குறுகிய காலப்பகுதிக்குள் உயர்தரப் பாடத்திட்டங்களை முழுமையாக நிறைவு செய்து பரீட்சைக்குத் தயாராவது மாணவர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டார். வழங்கப்பட்டுள்ள […]