Tag: நாடுகடத்தல்
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அந்நாட்டின் மக்கள் எதிர்கொள்ளும் இடம்பெயர்வு கட்டாய நாடுகடத்தல் மற்றும் மனித உரிமைச் சிக்கல்கள் தொடர்ந்து கவலையை ஏற்படுத்தி வருகின்றன. 2021 ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய பின்னர் பெருமளவான ஆப்கானியர்கள் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைத் தேடி நாட்டை விட்டு வெளியேறினர். குறிப்பாக ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பெருமளவான ஆப்கானியர்களுக்கு தஞ்சமளித்த முக்கிய நாடுகளாக உள்ளன. எனினும் அண்மைக்காலத்தில் இந்த […]
அமெரிக்காவில் நாடுகடத்தல் அச்சுறுத்தல், Temporary Protected Status திட்டத்தின் கீழ் பாதுகாப்பு பெற்று வாழ்ந்து வந்த 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட ஹெய்டி நாட்டவர்களின் பாதுகாப்பு காலம் முடிவடைந்துள்ளதால் அவர்கள் நாடுகடத்தப்படக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைக்கு வழி திறக்கப்பட்டுள்ளது. இந்த TPS பாதுகாப்பு முடிவடைந்தவுடன் அமெரிக்க குடியேற்ற அமலாக்க அமைப்பான ICE சட்டபூர்வ பாதுகாப்பை இழந்த ஹெய்டி நாட்டவர்களை இலக்கு வைத்து நடவடிக்கைகளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. […]
ஜெர்மனி நாடுகடத்தல், ஜெர்மனியின் மியூனிக் சர்வதேச விமான நிலையத்தில் புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துவதற்காக பிரத்யேக நாடுகடத்தல் முனையம் (Deportation Terminal) ஒன்றை அமைக்க விமான நிலைய மேற்பார்வை சபை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டம் மனித உரிமை அமைப்புகள் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் தரப்புகளின் எதிர்ப்பையும் மீறி முன்னெடுக்கப்படுகிறது. இந்த புதிய கட்டிடம் ஜெர்மன் கூட்டாட்சி பொலிஸாரின் (Federal Police) பயன்பாட்டிற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய நிர்வாகம் கட்டிடத்தை நிர்மாணித்து பின்னர் கூட்டாட்சி அரசுக்கு […]
சவுதி அரேபியா வில் குடியிருப்பு தொழிலாளர் மற்றும் எல்லைப் பாதுகாப்புச் சட்டங்களை மீறியவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது ஒரே வாரத்தில் 10,725 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 5,899 பேர் குடியிருப்பு சட்ட மீறல்களுக்காகவும் 3,084 பேர் எல்லைப் பாதுகாப்புச் சட்ட மீறல்களுக்காகவும் 1,742 பேர் தொழிலாளர் சட்ட மீறல்களுக்காகவும் கைது செய்யப்பட்டதாக சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 7,989 சட்டவிரோத குடியிருப்பாளர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர். மேலும் 14,268 பேர் பயண […]
Immigration Newsஐரோப்பிய ஒன்றியம் (EU) சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் Return Hubs (திரும்ப அனுப்பும் மையங்கள்) என்ற புதிய திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் நாடு விட்டு வெளியேற உத்தரவிடப்பட்ட குடியேற்றிகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள மூன்றாம் நாடுகளில் அமைக்கப்படும் சிறப்பு மையங்களுக்கு அனுப்பப்படலாம். அங்கு அவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படும் வரை தங்க வைக்கப்படுவார்கள். தற்போதைய நிலையில் இந்தத் திட்டம் குறித்து […]
சவுதி அரேபிய அரசு 2026 ஹஜ் காலத்தை முன்னிட்டு விசா காலாவதியான பின்னரும் நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. ஹஜ் மற்றும் உம்ரா காலங்களில் விதிமுறைகளை மீறி தங்குபவர்கள் மீது அதிகபட்சமாக 6 மாதங்கள் சிறைத்தண்டனை 50,000 சவுதி ரியால் அபராதம் மற்றும் பின்னர் நாடுகடத்தல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் ஹஜ் அனுமதிப்பத்திரம் இல்லாமல் மக்கா பகுதிக்குள் நுழைய முயற்சிப்பவர்களுக்கும் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சவுதி […]