சவுதி அரேபிய அரசு 2026 ஹஜ் காலத்தை முன்னிட்டு விசா காலாவதியான பின்னரும் நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. ஹஜ் மற்றும் உம்ரா காலங்களில் விதிமுறைகளை மீறி தங்குபவர்கள் மீது அதிகபட்சமாக 6 மாதங்கள் சிறைத்தண்டனை 50,000 சவுதி ரியால் அபராதம் மற்றும் பின்னர் நாடுகடத்தல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் ஹஜ் அனுமதிப்பத்திரம் இல்லாமல் மக்கா பகுதிக்குள் நுழைய முயற்சிப்பவர்களுக்கும் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அதிகாரிகள் குறிப்பாக ஹஜ் அனுமதி இல்லாமல் ஹஜ் செய்ய முயற்சிப்பவர்களுக்கு 20,000 சவுதி ரியால் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் சட்டவிரோதமாக ஹஜ் செய்ய உதவுபவர்கள் அல்லது விசா ஏற்பாடு செய்பவர்கள் மீது 100,000 ரியால் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளனர். சில சந்தர்ப்பங்களில் 10 ஆண்டுகள் வரை மீண்டும் சவுதிக்கு நுழைய தடை விதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.













Leave a Reply