மேலும் ஹஜ் அனுமதிப்பத்திரம் இல்லாமல் மக்கா பகுதிக்குள் நுழைய முயற்சிப்பவர்களுக்கும் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அதிகாரிகள் குறிப்பாக ஹஜ் அனுமதி இல்லாமல் ஹஜ் செய்ய முயற்சிப்பவர்களுக்கு 20,000 சவுதி ரியால் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் சட்டவிரோதமாக ஹஜ் செய்ய உதவுபவர்கள் அல்லது விசா ஏற்பாடு செய்பவர்கள் மீது 100,000 ரியால் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளனர். சில சந்தர்ப்பங்களில் 10 ஆண்டுகள் வரை மீண்டும் சவுதிக்கு நுழைய தடை விதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.


































