Tag: Court Order
உடற் சிகிச்சை நிபுணர் கொலை, நுவரெலியாவில் உடற் சிகிச்சை நிபுணர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் அவரது மனைவி மற்றும் குற்றத்திற்கு துணைபுரிந்ததாகக் கூறப்படும் மேலும் இருவர் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த நால்வரும் இன்று (30) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் சிறைச்சாலை அதிகாரிகளால் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார். விளக்கமறியலில் உள்ளவர்கள் நாரம்மல […]
CEB Compensation, குடும்பத் தகராறை எதிர்த்து உயரழுத்த மின்சார பரிமாற்றக் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் ஏற்பட்ட நட்டத்தை இலங்கை மின்சார சபைக்கு (CEB) இழப்பீடாக செலுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை 21 ஆம் தேதி கம்புறுப்பிட்டிய பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றது. குடும்பப் பிரச்சினையை முன்னிறுத்தி குறித்த நபர் உயரழுத்த மின்சார பரிமாற்றக் கோபுரத்தில் ஏறியதால் பாதுகாப்பு காரணங்களுக்காக திஹகொட, கம்புறுப்பிட்டிய, அக்குரெஸ்ஸ, முலட்டியான, தெய்யந்தர, மாவரல மற்றும் தெனியாய […]
Archchuna Warrant, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததைத் தொடர்ந்து இன்று (24) நாடாளுமன்றத்தில் கடும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. நீதிமன்றத்தின் பிடியாணை தொடர்பான விவகாரம் சபையில் எழுப்பப்பட்டதை அடுத்து ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சில நிமிடங்கள் சபை நடவடிக்கைகள் பதற்றமான சூழ்நிலையில் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் என்பதால் நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு முழுமையான மரியாதை வழங்கப்பட வேண்டும் என சில […]
அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச கட்டணத்தை மீறி முழுமையான இரத்தப் பரிசோதனை (Full Blood Count – FBC) ஒன்றுக்கு நோயாளிகளிடம் கூடுதல் தொகை அறவிட்டதை ஒப்புக்கொண்ட யாழ்ப்பாணம் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் ரூ.3 மில்லியன் அபராதம் விதித்துள்ளது. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை நிர்ணயித்தபடி FBC பரிசோதனைக்கான அதிகபட்ச கட்டணம் ரூ.400 ஆக இருந்த போதிலும் குறித்த வைத்தியசாலை ரூ.550 அறவிட்டது ஜூலை 13ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் கண்டறியப்பட்டது. இதையடுத்து […]
திருகோணமலை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னியா வெந்நீரூற்று தொல்பொருள் வளாகத்தில் புத்த விகாரை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அரசின் முக்கிய பிரதிநிதிகளும் தொல்பொருளியல் திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை கன்னியா வெந்நீரூற்று பகுதியில் புதிய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என திருகோணமலை மேல்நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்த போதிலும் அந்த உத்தரவை மீறி புராதன பிள்ளையார் ஆலய இடிபாடுகள் […]
சீன நாட்டவர் ஒருவரிடமிருந்து ரூ.20 மில்லியன் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுதா ஜனதித் பண்டாரபாயவை 24 மணி நேரம் காவலில் வைத்து விசாரிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (22) அனுமதி வழங்கியுள்ளது. நேற்று (21) கொள்ளுபிட்டிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் காவல்துறை மா அதிபரின் அறிவுறுத்தலின்படி மேலதிக விசாரணைகள் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக […]
யட்டியந்தோட்டை போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி (OIC) பயன்படுத்தியதாகக் கூறப்படும் காணாமல் போன சேவை துப்பாக்கி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொலிஸ் விசாரணைகளின்படி அரசின் சேவை துப்பாக்கி காணாமல் போனமை தொடர்பில் விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. துப்பாக்கி எவ்வாறு காணாமல் போனது அதில் வேறு யாரேனும் தொடர்புடையவர்களா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் மேலதிக விசாரணைகள் […]
கண்டி இளம் மனைவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குண்டசாலை வாராபிட்டிய பகுதியில் வசித்து வந்த 23 வயதுடைய திருமணமான பெண்ணின் உடல் இன்று (20) அதிகாலை அவரது கணவரின் வீட்டில் உள்ள படுக்கையறையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கண்டி இளம் மனைவி மரணம் தொடர்பாக அவரது உறவினர்கள் கடுமையான சந்தேகங்களை வெளியிட்டுள்ளனர். கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் தாக்கப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனினும் கணவர் அளித்துள்ள […]
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய […]
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் உருவாக்கியிருந்த சுமார் 1.776 பில்லியன் டாலர் மதிப்பிலான “Anti-Weaponization Fund” (அரசின் அதிகார துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிதி) திட்டத்திற்கு அமெரிக்க கூட்டாட்சி நீதிபதி தற்காலிக தடை விதித்துள்ளார். டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அரசியல் நோக்கில் அரசு அமைப்புகளால் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர்களுக்கு இந்நிதி மூலம் இழப்பீடு வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த நிதி உருவாக்கத்திற்கு சட்ட அடிப்படை கண்காணிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் […]