Tag: Crude Oil
Saudi oil attack, ஜேமனில் செயல்படும் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் முக்கியமான கச்சா எண்ணெய் விநியோக மற்றும் போக்குவரத்து கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளனர். ஹூதி இராணுவ பேச்சாளர் யஹ்யா சாரி வெளியிட்ட அறிக்கையில் கிழக்கு சவுதியை செங்கடல் பகுதியில் அமைந்துள்ள முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான யன்பு துறைமுகத்துடன் இணைக்கும் பல முக்கிய இடங்கள் குறிவைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை யேமன் வான்வெளியில் சவுதி அரேபியா மேற்கொண்டதாக கூறப்படும் […]
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இராணுவ பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்களை ஈரான் விரிவுபடுத்தியதையடுத்து ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் உலக எரிசக்தி போக்குவரத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் தாக்கமாக பிரெண்ட் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 2.34 அமெரிக்க டொலர் அதிகரித்து 78.35 அமெரிக்க டொலராகவும் அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இண்டர்மீடியட் (WTI) […]
சர்வதேச அளவில் மசகு எண்ணெய் உற்பத்தி செய்யும் முன்னணி நாடுகளின் கூட்டமைப்பான OPEC+ வரும் ஆகஸ்ட் மாதம் முதல் நாளாந்த எண்ணெய் உற்பத்தியை மேலும் 188,000 பீப்பாய்களால் அதிகரிக்க கொள்கை ரீதியாக உடன்பாடு கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய கிழக்கில் நிலவிய பதற்ற நிலைமை தணிந்து உலகின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி கடல்வழியான ஹோர்முஸ் நீரிணை படிப்படியாக மீண்டும் திறக்கப்பட்டு வருவதும், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்து வருவதும் இந்தத் தீர்மானத்திற்கு முக்கிய காரணங்களாகக் […]
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவடைந்துள்ள நிலையில் அரசாங்கம் உடனடியாக எரிபொருள் விலையைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார். ஹம்பாந்தோட்டையில் இளைஞர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர் வாழ்க்கைச் செலவு உயர்வால் பொதுமக்களும் இளைஞர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். குறிப்பாக துவிச்சக்கர வண்டிகளைப் பயன்படுத்தி நாளாந்த கூலித் தொழிலில் ஈடுபடும் இளைஞர்களுக்கு எரிபொருள் செலவு பெரும் சுமையாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். உலக […]
மத்திய கிழக்கில் ஏற்பட்டிருந்த யுத்தம் முடிவடைந்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் குறைந்துள்ள நிலையில் அரசாங்கம் உடனடியாக எரிபொருட்களின் விலையை குறைத்து அதன் நன்மையை மக்களுக்கு வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று (19) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் மத்திய கிழக்கில் யுத்தம் ஆரம்பமானபோது உலக சந்தை நிலவரத்தை காரணம் காட்டி அரசாங்கம் எரிபொருள் விலையை உயர்த்தியதாகவும் […]