மட்டக்களப்பில் புடவைக் கடையில் தீ விபத்து
மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள புடவைக் கடையொன்றில் இன்று சனிக்கிழமை (20) பகல் ஏற்பட்ட தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது. கடை உரிமையாளர் பகல் உணவுக்காக கடையை மூடிவிட்டு தனது வீட்டிற்குச் சென்றிருந்த வேளையில் இந்த தீ பரவல் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. தீ வேகமாக பரவியதால் கடையிலிருந்த புடவைகள் மற்றும் ஏனைய பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளன. சம்பவம் குறித்து தகவலறிந்த பிரதேச மக்கள் மற்றும் தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் […]
