Tag: Humanitarian Crisis
போர் நிறுத்தம் அமலில் இருந்தபோதிலும் மத்திய காசாவின் நுசெராத் அகதிகள் முகாமில் நடைபெற்ற இறுதிச் சடங்கின் போது பொதுமக்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதலில் குறைந்தது எட்டு பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர். வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் காசா முழுவதும் இடம்பெற்ற தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆகவும் கடந்த 72 மணி நேரத்தில் 25 ஆகவும் உயர்ந்துள்ளதாக காசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நுசெராத் அகதிகள் முகாமிலுள்ள அல்-அவ்தா மருத்துவமனை வெளியிட்ட தகவலின்படி […]
Myanmar News,மியான்மாரில் தொடரும் வன்முறை மற்றும் மனிதாபிமான நெருக்கடியிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கடலில் மாயமானதைத் தொடர்ந்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஆணையம் (UNHCR) மற்றும் சர்வதேச குடியேற்ற அமைப்பு (IOM) இணைந்து வெளியிட்ட அறிக்கையின்படி ஜூன் மாத இறுதியில் மியான்மரின் ரகைன் மாநிலத்திலிருந்து புறப்பட்ட இரண்டு படகுகளே இந்த பேரிடரில் சிக்கியுள்ளன. முதல் படகில் சுமார் 250 […]
வடக்கு நைஜரில் அமைந்துள்ள சஹாரா பாலைவனப் பகுதியில் லொறி ஒன்று செயலிழந்ததால் ஏற்பட்ட துயரகரமான சம்பவத்தில் தண்ணீர் மற்றும் உணவின்றி சிக்கித் தவித்த குறைந்தது 49 பேர் தாகம் காரணமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் அனைவரும் நைஜர் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் மாலி நாட்டில் நடைபெற்ற மத நிகழ்வொன்றில் பங்கேற்றுவிட்டு தாய்நாடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. மாலி மற்றும் அல்ஜீரியா எல்லைகளுக்கு அருகிலுள்ள அசமகா பகுதியிலிருந்து மேற்கே […]
ஆப்கானிஸ்தானின் கோர் மாகாண தலைநகரான சாக்சரானில் வேலை தேடி தினமும் நூற்றுக்கணக்கான ஆண்கள் அதிகாலை முதலே சாலையோரங்களில் காத்திருக்கும் பரிதாபகரமான நிலை உருவாகியுள்ளது. குடும்பத்திற்கான ஒரு நேர உணவைப் பெற்றுத்தரவேண்டும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் வேலைக்காக காத்திருந்தாலும் பெரும்பாலோருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. 45 வயதான ஜுமா கான் கடந்த ஆறு வாரங்களில் மூன்று நாட்கள் மட்டுமே வேலை கிடைத்ததாகவும் அதன்மூலம் கிடைத்த குறைந்த வருமானத்தால் தனது குடும்பத்தைப் போஷிக்க முடியாமல் தவிப்பதாகவும் தெரிவித்துள்ளார். “மூன்று நாட்களாக […]