Tag: Jaffna Teaching Hospital
சகோதரிகள் தீக்குளிப்பு, யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் இருவர் தமக்குத் தாமே தீ மூட்டிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீக்காயங்களுக்கு உள்ளான இருவரும் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆரம்ப விசாரணைகளின்படி வாழ்வதற்கான விருப்பமின்மை காரணமாக இவ்வாறு செய்ததாக அவர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தின் பின்னணி மற்றும் காரணங்கள் தொடர்பாக சுன்னாகம் […]
மன்னார் விபத்து, கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த அருட்சகோதரிகள் சென்ற வாகனம் இன்று (22) அதிகாலை சுமார் 3.30 மணியளவில் மன்னார் மாவட்டத்தின் பறையனாலங்குளம் இரும்பு பாலம் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த நான்கு அருட்சகோதரிகள் காயமடைந்த நிலையில் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விபத்துக்குள்ளான வாகனத்தில் மன்னாரைச் சேர்ந்த மாசற்ற அமலோற்பவ அன்னை சபையைச் […]
அர்ச்சுனா நாடாளுமன்றம் விலகல் தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அர்ச்சுனா ராமநாதன் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் தாம் இன்னும் இரண்டு முதல் மூன்று வாரங்கள் மட்டுமே நாடாளுமன்றத்தில் இருப்பேன் என்றும் அதன் பின்னர் அங்கிருந்து விலக நேரிடலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் வடக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பான பல முறைப்பாடுகள் மற்றும் ஆவணங்களை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கும் ஜனாதிபதி அனுர குமார […]
யாழ்ப்பாணம் மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து 28 வயதுடைய இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள வீட்டொன்றிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்களும் கிராம உத்தியோகத்தரும் காவல்துறைக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மானிப்பாய் காவல்துறையினர் பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சோதனை மேற்கொண்டனர். இதன்போது 1997 ஆம் ஆண்டு பிறந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டார். […]
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் புத்தூர் பகுதியில் வெள்ளிக்கிழமை (5) இரவு இடம்பெற்ற கடுமையான வீதி விபத்தில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். மட்டுவில் பகுதியில் இருந்து புத்தூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன் திடீரென வீதியைக் குறுக்காகக் கடந்த முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மோதலின் தாக்கம் மிகுந்ததால் டிப்பர் வாகனம் முச்சக்கரவண்டியின் மீது ஏறிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரின் கால்களில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. காயமடைந்தவர்கள் உடனடியாக யாழ்ப்பாணம் […]
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பல ஆண்டுகளாக சுகாதார தொண்டர்களாக பணியாற்றி வரும் ஊழியர்கள் அரசாங்கம் வழங்கியதாகக் கூறப்பட்ட நியமன வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என குற்றம்சாட்டி இன்று (05) போராட்டத்தில் ஈடுபட்டனர். வைத்தியசாலை முன்பாக ஆரம்பமான இந்தப் போராட்டம் பின்னர் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரை பேரணியாக முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலையான ஊதியம் இன்றி சேவையாற்றி வந்த நிலையில் புதிய நியமனங்கள் வழங்கப்படும் போது தற்போது தற்காலிகமாக பணியாற்றும் […]