சகோதரிகள் தீக்குளிப்பு, யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் இருவர் தமக்குத் தாமே தீ மூட்டிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீக்காயங்களுக்கு உள்ளான இருவரும் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆரம்ப விசாரணைகளின்படி வாழ்வதற்கான விருப்பமின்மை காரணமாக இவ்வாறு செய்ததாக அவர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தின் பின்னணி மற்றும் காரணங்கள் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் செய்தி மனநல நெருக்கடியை உள்ளடக்கியதாக இருக்கலாம். இதுபோன்ற உணர்வுகள் ஒருவருக்கிருந்தால் நம்பிக்கைக்குரிய குடும்பத்தினர் நண்பர் அல்லது மனநல நிபுணரிடம் உடனடியாக உதவி நாடுவது மிகவும் முக்கியமானது.













Leave a Reply