Tag: Northern Province
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றம் எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதிக்கு முக்கிய கட்டளைக்காக வழக்கை ஒத்திவைத்துள்ளது. தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியரைப் பற்றிய அவதூறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டதாகக் கூறி நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் மேலும் சில வைத்தியர்கள் தனியார் ஊடகம் மற்றும் சில வலையொளி […]
யாழ்ப்பாணத்தின் தையிட்டி விகாரை பகுதிக்கு சென்றிருந்த இரு தமிழ் இளைஞர்கள் பலாலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெசாக் தினத்தை முன்னிட்டு தையிட்டி விகாரையில் விசேட வழிபாடுகள் இடம்பெற்று வந்த நிலையில் விகாரைக்கு அருகாமையில் காணி உரிமையாளர்களின் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழலில் வடமராட்சி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் விகாரைக்கு செல்வதாகக் கூறி அப்பகுதிக்குள் சென்றதுடன் அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடி புகைப்படங்களையும் எடுத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை அவதானித்த பாதுகாப்பு தரப்பினர் அவர்களிடம் […]
தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பான விவகாரத்தில் பலாலி பொலிஸார் தன்னிடம் வாக்குமூலம் பதிவு செய்ததைத் தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் பலாலி பொலிஸார் தமக்கு எதிராக “பொய் வழக்கு” தாக்கல் செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 2025 டிசம்பர் 4ஆம் திகதி தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது போராட்டத்தை குழப்பும் வகையில் பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார். பின்னர் போக்குவரத்து மற்றும் […]
யாழ்ப்பாணம் வேலணை துறையூர் கிராமிய கடற்றொழில் அமைப்பின் சுத்திகரிக்கப்பட்ட நன்னீர் ஐஸ் உற்பத்தி நிலையம் இன்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரினால் திறந்து வைக்கப்பட்டது. மீனவர் சமூகத்தின் வாழ்வாதார முன்னேற்றம் தொழில் பாதுகாப்பு மற்றும் வடக்கின் கடல்சார் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போதைய கடற்றொழில் துறையில் மீன்வளப் பொருட்களின் தரத்தை பாதுகாப்பது மிக முக்கிய சவாலாக காணப்படுவதால் சுத்திகரிக்கப்பட்ட நன்னீரில் தயாரிக்கப்படும் தரமான ஐஸ்கட்டிகளை மீனவர்களுக்கு வழங்கும் நோக்கில் […]
மன்னார் மாவட்டத்தில் ‘டித்வா’ இயற்கைப் பேரிடரால் குவிக்கப்பட்ட மணலை அகற்றுவதற்காக வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேங்கிய மணலை அகற்றும் நோக்கில் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்ட அனுமதிகள் குறிப்பிட்ட சில தரப்பினரால் வர்த்தக நோக்கங்களுக்காகவும் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தச் செயற்பாடுகள் மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டதுடன் அரசின் விதிமுறைகளும் மீறப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக உள்ளூர் மக்கள் மற்றும் […]
யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய விகாரை தொடர்பான வழக்கில் முக்கிய கட்டளை இன்று மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழங்கப்படவுள்ளது. வலி வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான “பவானி” வீதியின் ஒரு பகுதி விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அந்த வீதியை மீட்கும் நடவடிக்கையாக அமைக்கப்பட்டுள்ள வேலியை அகற்ற பிரதேச சபைக்கு அனுமதி வழங்கப்படுமா அல்லது தடை விதிக்கப்படுமா என்பது குறித்தே நீதிமன்றம் தீர்மானிக்க உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் வீதி அளவீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து […]