Tag: Northern Province
கீரிமலை குப்பை, யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்ட மேட்டில் இரண்டு நாட்களாக தொடர்ந்து எரிந்து வரும் தீயால் எழுந்துள்ள அடர்ந்த புகை காரணமாக அப்பகுதி மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். வலி. வடக்கு பிரதேசத்தில் மாவிட்டபுரம்–கீரிமலை வீதியோரத்தில் சுண்ணக்கல் அகழப்பட்ட பாரிய குழிகளில் கடந்த சில ஆண்டுகளாக கழிவுகள் கொட்டப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 2019ஆம் ஆண்டு “சுகாதார நில நிரவுகை திட்டம்” என்ற பெயரில் இக்குழிகளை குப்பைகளால் மூடும் முயற்சிக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் […]
யாழ்ப்பாணம் மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து 28 வயதுடைய இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள வீட்டொன்றிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்களும் கிராம உத்தியோகத்தரும் காவல்துறைக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மானிப்பாய் காவல்துறையினர் பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சோதனை மேற்கொண்டனர். இதன்போது 1997 ஆம் ஆண்டு பிறந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டார். […]
கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (16) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் கடும் வாக்குவாதம் மற்றும் பதற்றமான சூழ்நிலையால் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. கூட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா திருவையாறு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தென்னைச் செய்கைத் திட்டத்தில் தென்னை நாற்று விநியோகம் மற்றும் நடுகை நடவடிக்கைகளில் முறைகேடுகள் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டியதுடன் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரின் செயற்பாடுகளையும் விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் […]
யாழ்ப்பாணம் வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள தனியார் காணிகளில் இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் விவசாய நடவடிக்கைகள் தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பாதுகாப்பு பிரதியமைச்சர் வலி.வடக்கில் 1,661 ஏக்கர் காணி இராணுவத் தேவைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான இழப்பீடு காணி உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன் அந்தப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் விவசாயம் இராணுவத்தின் உள்நாட்டு தேவைகளுக்காக மட்டுமே என கூறியிருந்தார். எனினும் அந்தக் கூற்றை நிராகரித்துள்ள வலி.வடக்கு மக்கள் தங்களது […]
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் வியாபாரத்துக்குச் சென்ற முதியவர் ஒருவரை தாக்கி அவரிடமிருந்த பணத்தை இரு மர்மநபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்கரத்தை பகுதியில் இருந்து நவாலி நோக்கி வியாபாரத்திற்காக பயணித்துக் கொண்டிருந்த முதியவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வழிமறித்து வழி கேட்பது போல் நடித்து அவருடன் உரையாடியுள்ளனர். பின்னர் திடீரென முதியவரை தாக்கி அவர் வியாபாரத்திற்காக வைத்திருந்த பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த […]
மத்திய பசுபிக் பெருங்கடல் பிராந்தியத்திலிருந்து இந்து சமுத்திர கடல் பரப்பிற்கு ஊடுருவியுள்ள எல்நினோ காலநிலை நிகழ்வு இம்மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை இலங்கையில் குறிப்பிடத்தக்க வெப்ப தாக்கத்தை ஏற்படுத்தும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியரும் கலைப் பீடாதிபதியுமான நாகமுத்து பிரதிபராஜா எச்சரித்துள்ளார். யாழ்ப்பாணம் கலட்டி வீதியில் உள்ள மிலேனியம் தனியார் விடுதியில் நடைபெற்ற எல்நினோ தொடர்பான செயலமர்வில் உரையாற்றிய அவர், இந்து சமுத்திரப் பகுதியில் அதிகரித்துள்ள கடல் வெப்பநிலை இலங்கை மற்றும் மாலைதீவுகளில் […]
Asia News,நெல் சந்தைப்படுத்தல் சபை எதிர்வரும் திங்கட்கிழமை (13) முதல் நெல் கொள்முதல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் தற்போது அதிகளவில் அறுவடை நடைபெற்று வரும் பகுதிகளில் முதலில் களஞ்சியசாலைகளைத் திறந்து நெல் கொள்முதல் மேற்கொள்ளப்படும் எனக் கூறினார். வடக்கு, கிழக்கு மற்றும் அம்பாறை பகுதிகளில் பரவலாக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் ஆரம்ப கட்ட கொள்முதல் நடவடிக்கைகள் அந்தப் […]
சிறிலங்காவில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக நீடித்து வரும் அதிகளவான இராணுவக் குவிப்புக்கு எதிராக மீண்டும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்திருந்தாலும் தமிழர் தாயகப் பகுதிகளில் பெருமளவு இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதேவேளை தென்னிலங்கையில் பாதாள உலகக் குழுக்களின் வன்முறை துப்பாக்கிச் சூடு, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு வளங்கள் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக வடகிழக்கில் இராணுவ மயமாக்கலைத் தொடரவும் தமிழ் […]
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கின் மருதங்கேணி பகுதியில் தனியாருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் 25 ஏக்கர் காணியை சுவீகரிக்கும் நடவடிக்கைகள் நாளை மறுதினம் (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனைத் தடுக்க பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். தனது இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் மக்களின் காணிகளை அபகரிக்கும் எந்த நடவடிக்கையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மக்களின் காணிகள் மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட […]
அடுத்த ஆண்டு முதல் ஆறு மாதங்களுக்குள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மட்டும் மாகாண சபைத் தேர்தலை நடத்தி பின்னர் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பான சட்டங்களை நீதிமன்ற சவால்களுக்கு அப்பாற்பட்ட வகையில் அமுல்படுத்த தற்போதைய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் வடக்கு மற்றும் கிழக்கில் தெரிவாகும் முதலமைச்சர்களுக்கு தேவையான ஆளுநர்களை ஜனாதிபதி நியமித்து அதன் […]