வடக்கு, கிழக்கு மற்றும் அம்பாறை பகுதிகளில் பரவலாக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் ஆரம்ப கட்ட கொள்முதல் நடவடிக்கைகள் அந்தப் பகுதிகளை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ளன. விவசாயிகள் தங்களது விளைச்சலை நியாயமான விலையில் விற்பனை செய்யும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாடு நெல் ஒரு கிலோகிராமுக்கு ரூ.120, சம்பா நெல் ரூ.130 மற்றும் கீரி சம்பா நெல் ரூ.140 என்ற விலையில் கொள்வனவு செய்யப்படும் என நெல் சந்தைப்படுத்தல் சபை அறிவித்துள்ளது. இதற்காக தேவையான களஞ்சியசாலைகள் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.Asia News
மொத்தம் 143 களஞ்சியசாலைகளைப் பயன்படுத்தி நெல் கொள்வனவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவை முழுக் கொள்ளளவை எட்டும் பட்சத்தில் அருகிலுள்ள தனியார் துறை களஞ்சியசாலைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார்.
இந்த நெல் கொள்முதல் திட்டத்திற்காக அரசாங்கம் ரூ.6,000 மில்லியனை நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஒதுக்கியுள்ளது. மேலும் உறுதிமொழிக் கடன் திட்டத்தின் கீழ் ரூ.10,000 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல்லை சேமித்து வைக்க முடியும் எனவும், முழு நடவடிக்கையும் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் கண்காணிப்பில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
































