Tag: Eastern Province
இலங்கை வெப்ப எச்சரிக்கை, கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா பொலன்னறுவை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி நாளை (ஆகஸ்ட் 01) பகல் நேரத்தில் குறித்த பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை (Heat Index) சில இடங்களில் “எச்சரிக்கை நிலை” (Caution Level) வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பச் சுட்டெண் (Heat Index) என்பது காற்றின் ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச […]
சவுதி அரேபியாவில் 50°C வெப்பம், சவுதி அரேபியாவின் சில பகுதிகளில் 2026 ஆம் ஆண்டின் இதுவரையிலான அதிகபட்ச வெப்பநிலையாக 50 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை கடும் வெப்பம் நிலவிய நிலையில் அல்-அஹ்சா நகரில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸை எட்டியதாக அந்நாட்டின் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் மே 29 ஆம் தேதி அல்-அஹ்சாவில் 49.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது. தற்போது பதிவான 50 டிகிரி […]
Sri Lanka News,ருஹுணு மகா கதிர்காம தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் பயண வசதிக்காக இலங்கை போக்குவரத்து சபை (SLTB) விசேட பேருந்து சேவைகளை ஆரம்பித்துள்ளது.இந்த விசேட சேவைகள் கொழும்பிலிருந்து கதிர்காமம் வரை மட்டுமின்றி கிழக்கு மாகாணம் மற்றும் மலையக பகுதிகளில் இருந்து கதிர்காமம் நோக்கியும் முன்னெடுக்கப்படுகின்றன.பயணிகள் தங்களது இருக்கைகளை SLTBயின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் வசதிக்காக கதிர்காம பேருந்து நிலையத்தில் இரண்டு டிக்கெட் […]
Asia News,நெல் சந்தைப்படுத்தல் சபை எதிர்வரும் திங்கட்கிழமை (13) முதல் நெல் கொள்முதல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் தற்போது அதிகளவில் அறுவடை நடைபெற்று வரும் பகுதிகளில் முதலில் களஞ்சியசாலைகளைத் திறந்து நெல் கொள்முதல் மேற்கொள்ளப்படும் எனக் கூறினார். வடக்கு, கிழக்கு மற்றும் அம்பாறை பகுதிகளில் பரவலாக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் ஆரம்ப கட்ட கொள்முதல் நடவடிக்கைகள் அந்தப் […]
சிறிலங்காவில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக நீடித்து வரும் அதிகளவான இராணுவக் குவிப்புக்கு எதிராக மீண்டும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்திருந்தாலும் தமிழர் தாயகப் பகுதிகளில் பெருமளவு இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதேவேளை தென்னிலங்கையில் பாதாள உலகக் குழுக்களின் வன்முறை துப்பாக்கிச் சூடு, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு வளங்கள் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக வடகிழக்கில் இராணுவ மயமாக்கலைத் தொடரவும் தமிழ் […]
அடுத்த ஆண்டு முதல் ஆறு மாதங்களுக்குள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மட்டும் மாகாண சபைத் தேர்தலை நடத்தி பின்னர் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பான சட்டங்களை நீதிமன்ற சவால்களுக்கு அப்பாற்பட்ட வகையில் அமுல்படுத்த தற்போதைய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் வடக்கு மற்றும் கிழக்கில் தெரிவாகும் முதலமைச்சர்களுக்கு தேவையான ஆளுநர்களை ஜனாதிபதி நியமித்து அதன் […]
மக்கள் தமது உரிமைகளுக்காகவும் தமது உற்பத்திக்காகவும் போராடும் நிலைமை தற்போது உருவாகியுள்ளதாகவும் இதனை கருத்தில் கொண்டு விவசாய அமைச்சும் ஜனாதிபதியும் உடனடியாக தலையீடு செய்து தீர்வு வழங்க வேண்டும் என்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறீநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் வருமானத்தை அதிகரிக்க வெற் (VAT) வரி உள்ளிட்ட வரி விதிப்புகள் அமுல்படுத்தப்பட்டாலும் அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் சுமைகளை எதிர்கொள்ளாத வகையில் அரசாங்கம் சுயாதீனமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் […]
இன்றைய வானிலை எச்சரிக்கை தொடர்பாக வானிலை ஆய்வு திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் இன்று (22) இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு திணைக்களத்தின் தகவலின்படி மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகிறது. அத்துடன் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் […]
கிராஸ் கன்ட்ரி வெற்றியாளர்கள் பட்டியலில் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த விக்னராஜ் வக்ஷன் மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ரசரா விஜேசூரிய ஆகியோர் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். தேசிய விளையாட்டு விழா 2026 இன் தொடக்கப் போட்டியாக நடைபெற்ற இந்த கிராஸ் கன்ட்ரி சாம்பியன்ஷிப்பில் இருவரும் தங்களது திறமையை வெளிப்படுத்தி தங்கப் பதக்கங்களை கைப்பற்றினர். ஒன்பது மாகாணங்களைச் சேர்ந்த மொத்தம் 122 தடகள வீரர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில் 77 ஆண் வீரர்களும் 45 பெண் வீராங்கனைகளும் […]
மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் குளியலறையில் அமைந்திருந்த தண்ணீர்த் தொட்டியில் தவறி விழுந்த 11 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். ஏறாவூர் 5ஆம் பிரிவு நீதிமன்ற வீதியைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆரம்ப தகவல்களின் படி சிறுமியின் தாயார் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டிற்கு வெளியே சென்றிருந்த நிலையில், சிறுமி தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். சம்பவம் இடம்பெற்ற நாளில் சிறுமியும் அவரது சகோதரனும் மட்டும் […]