Tag: PTA Sri Lanka
தற்போது அமலில் உள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு (PTA) பதிலாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கவும் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாக்கவும் புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அரசின் எதிர்கால பாதுகாப்பு மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர் நீண்டகாலமாக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்த பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் புதிய சட்டக் கட்டமைப்பின் கீழ் ரத்து செய்யப்படும் எனக் கூறினார். […]
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலே எந்தவொரு குற்றத்திலும் தொடர்பில்லாதவராக இருந்தால் விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் சலே கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர் பெப்ரவரி மாதம் முதல் தடுப்புக்காவலில் இருந்தபோதும் எந்த எதிர்ப்பும் எழாத நிலையில் முன்னாள் ஜனாதிபதி […]
விடுதலைப் புலிகள் அமைப்பின் பாடல்களைத் தொடர்புபடுத்தி கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறித்த இளைஞர் மற்றும் அவருடன் தொடர்புடைய சிலரின் செயற்பாடுகள் மக்களைத் தூண்டிவிடும் வகையில் அமைந்திருந்ததாக தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்கள் மற்றும் பிற நடவடிக்கைகள் மூலம் பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கக்கூடிய சூழல் காணப்பட்டதாகவும் இதன் காரணமாக பாதுகாப்பு தரப்பினரின் பரிந்துரைகளின் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் […]
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் சங்கீதனை எவ்வித நிபந்தனைகளுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, வவுனியாவில் இன்று (08) கண்டன கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா மாவட்ட கலைஞர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இந்தப் போராட்டம் பழைய பேருந்து நிலையப் பகுதியில் ஆரம்பமானது. இதில் அரசியல் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். போராட்டக்காரர்கள் பழைய […]
வட மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இலட்சியப் பாடல் ஒன்றைப் பாடியமைக்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை கடுமையாகக் கண்டிக்கத்தக்கது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். சந்திவெளி எக்கோ விளையாட்டுக் கழகத்திற்கு கடினப் பந்து கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய அவர் கடந்த காலங்களில் புலிக்கொடி மற்றும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சின்னங்கள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதிலும், குறித்த […]
அண்மைக்காலமாக நடைபெறும் ஆலயத் திருவிழாக்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் தாயக எழுச்சிப் பாடல்கள் இசைக்கப்படுவது தொடர்பாக போலீஸார் தங்களது தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக குறிப்பிட்ட ஒரு காணொளி (Video) தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட மாவட்ட குற்றத்தடுப்பு போலீஸ் பிரிவினர் அந்தப் பாடலைப் பாடிய கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர் சாவகச்சேரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து விசாரணை வரும் […]