Tag: public transport
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது பஸ் கட்டணத்தை உயர்த்தும் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று போக்குவரத்து பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு கூடுதல் சுமை ஏற்படாத வகையில் அரசாங்கம் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் உடனடி கட்டண உயர்வுக்கு அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் விலை உயர்வால் போக்குவரத்து துறையில் செலவுகள் அதிகரித்தாலும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தற்போதைய பஸ் கட்டணமே தொடரும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதனால் நாளாந்தம் பொதுப் […]
யாழ்ப்பாணத்தின் கடல் கடந்த தீவுப் பகுதிகளில் ஒன்றான அனலைதீவு மக்களின் நீண்டகால போக்குவரத்து தேவைக்கு தீர்வாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று கடற்படையின் சிறப்பு படகின் மூலம் அனலைதீவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் வழியாக தீவுக்கு அனுப்பப்பட்ட இந்த பேருந்து இனிமேல் அனலைதீவு பகுதிக்குள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் இதன் மூலம் அங்குள்ள மக்களின் நாளாந்த பயண நடவடிக்கைகள் மேலும் இலகுவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் […]
பாரிஸில் மே 8 நிகழ்வுகள் மெட்ரோ நிலையங்கள் மூடப்படும் பிரான்சில் இரண்டாம் உலகப்போரின் முடிவை நினைவுகூரும் மே 8 வெற்றி தினத்தின் 81ஆவது ஆண்டு நிகழ்வுகள் நாளை பாரிஸில் நடைபெறவுள்ளதால் தலைநகரின் பல பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் பல மெட்ரோ நிலையங்கள் மூடப்படுவதுடன் சில முக்கிய சாலைகளும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தற்காலிகமாக தடை செய்யப்படுகின்றன. குறிப்பாக மெட்ரோ Line 1 இல் உள்ள George V, Argentine, Franklin D. […]
டிஜிட்டல் திட்டம் – புதிய முறை டிக்கெட் வாங்காமல் பயணிக்கலாம். சுவிட்சர்லாந்தின் பொது போக்குவரத்து அமைப்பில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய டிஜிட்டல் திட்டம் விரைவில் சோதனை செய்யப்பட உள்ளது. “Bibo” (Be in – Be out) எனப்படும் இந்த புதிய மொபைல் செயலி பயணிகள் பேருந்து ரயில் அல்லது டிராம் போன்றவற்றில் ஏறி இறங்கும் நேரத்தை தானாகவே கண்டறிந்து பயணத்தின் முடிவில் சரியான கட்டணத்தை கணக்கிட்டு வசூலிக்கும். இதன் மூலம் பயணிகள் முன்கூட்டியே […]
கொழும்பு பேருந்து நிலையம் – சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சந்தேக நபர் கைது 2026 ஏப்ரல் 08 ஆம் தேதி புதுப்பித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் புறக்கோட்டை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்தனர். இந்த முறைப்பாடு கொழும்பு பேருந்து நிலையம் நலன்புரி பிரிவினரால் அளிக்கப்பட்டதாகும். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் 2026 ஏப்ரல் 11 ஆம் தேதி குறித்த குற்றச்செயலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் […]