Tag: Supreme Court
உயர் நீதிமன்ற, மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை மேலும் இரண்டு ஆண்டுகள் அதிகரிக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (27) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி தற்போது 63 ஆண்டுகளாக உள்ள மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதும் 65 ஆண்டுகளாக உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதும் […]
நாமல் ராஜபக்சாவின் 2019 திருமண நிகழ்வுக்காக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ரூ.2.68 மில்லியன் மின்சார கட்டணம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டை மையமாகக் கொண்ட அடிப்படை உரிமை மனுவை இலங்கை உச்சநீதிமன்றம் டிசம்பர் 4 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்துள்ளது. வழக்கறிஞர் விஜித குமார தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவின் வீரகெட்டிய இல்லத்தில் 2019 செப்டம்பர் 12 முதல் 15 வரை நடைபெற்ற திருமண நிகழ்விற்காக வழங்கப்பட்ட மின்சார சேவைக்கான மொத்த கட்டணம் ரூ.2,682,246.57 […]
உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை தன்னிச்சையான முறையில் அதிகரிக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய வலியுறுத்தியுள்ளார். இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை அதிகரிக்கும் அரசாங்கத்தின் முயற்சி தொடர்பான பொது கருத்தாடல் நிகழ்வில் உரையாற்றிய அவர் தற்போதைய விவாதம் நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 அல்லது 70 ஆக உயர்த்துவது குறித்ததல்ல என்றும் […]
நாட்டின் நீதிக்கட்டமைப்பில் தற்போது சுமார் 1.1 மில்லியன் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், நீதியை துரிதப்படுத்த மோதல் முகாமைத்துவ தீர்வு கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட தெரிவித்துள்ளார். ஹோமாகமவில் இன்று (01) இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்வில் உரையாற்றிய அவர் நாட்டில் உள்ள 333 நீதிமன்றங்களிலும் கீழ்நிலை நீதிமன்றங்கள் முதல் உயர் நீதிமன்றம் வரை வழக்குகள் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதாகவும் சில வழக்குகள் விசாரணை நிறைவடைய 10 […]
இலங்கையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வூதிய வயதை அதிகரிக்கும் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஆசியா-பசிபிக் பிராந்திய சட்ட அமைப்பான LAWASIA கடும் கவலை வெளியிட்டுள்ளது. இந்த திருத்தத்தை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசிடம் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. LAWASIA வெளியிட்டுள்ள அறிக்கையில் நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை பாதிக்கும் வகையில் அவசர அரசியலமைப்பு திருத்தங்கள் மேற்கொள்ளக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த மாற்றமும் பரந்த அளவிலான ஆலோசனை, வெளிப்படைத்தன்மை மற்றும் ஜனநாயக […]
2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 18 வயது மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் தொடர்பான வழக்கில் சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை இலங்கை உயர் நீதிமன்றம் இன்று (06) உறுதி செய்துள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்கள் […]