Tag: Tamil Nadu Politics
உதயநிதி ஸ்டாலின் கைது, காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தஞ்சாவூரில் நடைபெற்ற அரசியல் ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளை பயன்படுத்தியதாக பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக தஞ்சாவூர் காவல்துறையினர் உதயநிதி மீது இந்திய நியாயச் சட்டம தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட […]
தமிழகத்தின் கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழக முதல்வர் ஜோசப் விஜய் “நான் மக்களை விட்டு ஒருபோதும் ஓட மாட்டேன் எனக்கு பணமா அல்லது ஜனமா என்று கேட்டால் எனக்கு எனது ஜனம்தான் முக்கியம்” என்று வலியுறுத்தினார். கரூரில் இடம்பெற்ற துயரச் சம்பவம் தொடர்பாக பேசிய அவர் அன்றைய தினம் காவல்துறையினர் சூழ்நிலையை சரியாக கையாளத் தவறியதாகவும்,பின்னர் அந்தச் சம்பவத்திற்கான பழியை தன் மீது சுமத்தி அரசியல் ஆதாயம் தேடப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார். மக்களுக்காகவே அரசியலுக்கு […]
தமிழக இடைத்தேர்தல்தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறங்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. சில அரசியல் வட்டாரங்களின் தகவலின்படி ஆளும் கட்சிக்கு எதிராக வாக்குகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்த வேட்பாளர் யோசனையை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக தமிழக இடைத்தேர்தல் அம்பாசமுத்திரம் தொகுதியில் சமூக மற்றும் அரசியல் கணக்கீடுகளை அடிப்படையாகக் கொண்டு சீமானை பொது வேட்பாளராக நிறுத்துவது […]
தமிழக அரசியலில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் காங்கிரஸ் எம்.பி. S. Jothimani வெளியிட்ட கருத்து தற்போது அதிக கவனம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் திமுக – அதிமுக இணைப்பு குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில் அதனை எதிர்த்து மற்றும் விமர்சித்து பலரும் தங்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இதே நேரத்தில் அரசியல் நிலைமைகள் காரணமாக பல கட்சிகள் பின்னணியில் ஆலோசனைகள் […]
தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) முதல் தேர்தல் களத்தில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை இன்னும் எட்ட முடியாமல் உள்ளது. 234 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் பெரும்பான்மை அமைக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. தற்போது TVK 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் காங்கிரஸ் ஆதரவு உள்ளிட்ட கூட்டணிகளுடன் இணைந்தாலும் இன்னும் சுமார் 5 முதல் 6 எம்எல்ஏக்களின் ஆதரவு குறைவாக இருப்பதாக […]
தமிழக அரசியலில் கடந்த பத்தாண்டுகளாக தொடர்ந்த திமுக – காங்கிரஸ் கூட்டணி தற்போது முறிவடைந்துள்ள நிலையில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) காங்கிரஸ் ஆதரவு அளித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக களமிறங்கிய தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்தது. ஆனால் ஆட்சியமைக்க தேவையான முழுமையான பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் தனது 5 உறுப்பினர்களின் ஆதரவை […]
கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய நிலையில் அந்த மாவட்டத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அரசியல் ரீதியாக கவனத்தை ஈர்த்துள்ளன. மொத்தம் 4 தொகுதிகள் கொண்ட கரூரில் தமிழக வெற்றி கழகம் (தவெக) ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நெரிசல் துயரம் நடந்த பகுதியை உள்ளடக்கிய கரூர் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற்றுள்ளது முன்னாள் […]
தொங்கு சட்டப்பேரவை என்றால் என்ன? பெரும்பான்மை அரசை அமைப்பதற்குத் தேவையான குறைந்தபட்ச இடங்களை எந்தவொரு அரசியல் கட்சியும் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியும் பெறாதபட்சத்தில் ஏற்படுவது தொங்கு சட்டப்பேரவை எனப்படுகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் எந்த ஒரு கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காததால் மாநிலத்தில் “தொங்கு சட்டப்பேரவை” அமைவது உறுதியாகியுள்ளது. மொத்தம் 234 தொகுதிகள் கொண்ட சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் அவசியமான நிலையில் புதிய கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றி கழகம் (தவெக) அதிகபட்சமாக […]
அற்புதம் நடக்கப் போகுது இந்தியாவே வியந்து பார்க்கும் கணித்தார் செங்கோட்டையன்முன்னாள் அமைச்சரும் தவெக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் “அற்புதம் நடக்கப் போகிறது இந்தியாவே வியந்து பார்க்கும்” என்று தெரிவித்துள்ளார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது ஒவ்வொரு தேர்தலிலும் கருத்துக் கணிப்புகள் மாறுபடுவது வழக்கம் இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், பஞ்சாப் போன்ற இடங்களிலும் இது நடந்துள்ளது. கருத்துக் கணிப்புகள் சிலரின் கருத்தை மட்டுமே பிரதிபலிக்கும்ஆனால் மக்கள் அலை என்பது மிகப்பெரியது. இம்முறை தமிழகத்திலும் இந்திய […]