கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய நிலையில் அந்த மாவட்டத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அரசியல் ரீதியாக கவனத்தை ஈர்த்துள்ளன. மொத்தம் 4 தொகுதிகள் கொண்ட கரூரில் தமிழக வெற்றி கழகம் (தவெக) ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

நெரிசல் துயரம் நடந்த பகுதியை உள்ளடக்கிய கரூர் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற்றுள்ளது முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். மற்ற இரண்டு தொகுதிகளில் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2021 தேர்தலில் இந்த நான்கு தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதேவேளை கோவை மாவட்டத்தில் தவெக 10ல் 6 தொகுதிகளை கைப்பற்றியுள்ளதுடன் திமுக அங்கு கூடுதல் இடங்களை பெற்றுள்ளது.

கரூர் நெரிசல் சம்பவம் தேர்தல் முடிவுகளில் தாக்கம் ஏற்படுத்தியிருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அந்த விபத்தில் 18 வயதுக்குட்பட்ட 11 பேரை உட்பட 41 பேர் உயிரிழந்தது மக்களிடையே இன்னும் உணர்ச்சிவசப்படுத்தும் விடயமாக இருந்து வருகிறது இதன் பின்னணியில் வாக்காளர்களின் மனநிலையும் தேர்தல் முடிவுகளிலும் பிரதிபலித்ததாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading