பொன்.சிவகுமாரனின் 52ஆவது நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை அனுஷ்டிப்பு
விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாகக் கருதப்படும் பொன்.சிவகுமாரனின் 52ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (05) காலை 8 மணிக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உரும்பிராய் சந்தியில் அமைந்துள்ள பொன்.சிவகுமாரனின் நினைவிடத்தில் ஈகைச்சுடர் ஏற்றி நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன் அதற்கான ஏற்பாடுகளை வலிகாமம் கிழக்கு பிரதேச சபை முன்னெடுத்து வருகிறது. தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இன ஒடுக்குமுறைகளுக்கும் கல்வித் தரப்படுத்தல் கொள்கைக்கும் எதிராக போராடிய பொன். சிவகுமாரன் தமிழ் மாணவர் பேரவையில் […]
