Tag: Waste Management
கீரிமலை குப்பை, யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்ட மேட்டில் இரண்டு நாட்களாக தொடர்ந்து எரிந்து வரும் தீயால் எழுந்துள்ள அடர்ந்த புகை காரணமாக அப்பகுதி மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். வலி. வடக்கு பிரதேசத்தில் மாவிட்டபுரம்–கீரிமலை வீதியோரத்தில் சுண்ணக்கல் அகழப்பட்ட பாரிய குழிகளில் கடந்த சில ஆண்டுகளாக கழிவுகள் கொட்டப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 2019ஆம் ஆண்டு “சுகாதார நில நிரவுகை திட்டம்” என்ற பெயரில் இக்குழிகளை குப்பைகளால் மூடும் முயற்சிக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் […]
நாடு முழுவதும் நடைபெறவுள்ள பொசன் பௌர்ணமி விழாவை முன்னிட்டு இதுவரை 18,412 பொசன் தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் (PHI) சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் செயலாளர் சமில் முதுகுடா நாளை (30) மற்றும் ஜூலை 1 ஆம் தேதி செயல்படவுள்ள தான்சல்கள் அனைத்தும் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக கூறினார். மேலும் பொசன் விழா நடைபெறும் பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் தற்காலிக விற்பனை நிலையங்களும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றார். உணவு மற்றும் பானங்களை வழங்கும் […]
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் இலங்கை சுற்றுச்சூழல் அமைச்சு புதிய WhatsApp புகார் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி சுற்றுச்சூழல் தொடர்பான புகார்கள் மற்றும் தகவல்களை நேரடியாக அமைச்சுக்கு அனுப்ப பொதுமக்களுக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ”A Sustainable Biosphere, An Evergreen Life” என்ற நோக்கத்தின் கீழ் அறிமுகமான இந்த சேவையின் மூலம் சட்டவிரோத சுற்றுச்சூழல் அழிப்பு, குப்பை கொட்டுதல், மரவெட்டல், இயற்கை வளங்களுக்கு ஏற்படும் சேதங்கள் உள்ளிட்ட புகார்களை புகைப்படங்கள் மற்றும் ஆதாரங்களுடன் WhatsApp […]
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்காக 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளின் வரவு-செலவுத் திட்டங்கள் மூலம் மொத்தமாக ரூபா 11.5 பில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தபோதிலும் நாட்டில் டெங்கு பரவல் கட்டுக்கடங்காத அளவில் அதிகரித்துள்ளதாகவும் டெங்கு காரணமாக ஏற்படும் ஒவ்வொரு உயிரிழப்பிற்கும் அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் சர்வஜன அதிகாரம் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சன் செனவிரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் அறிக்கையின்படி நாட்டில் முதல் முறையாக ஒரே நாளில் […]
France News,பிரான்சில் பொது இடங்களில் குப்பைகளை தவறாக கொட்டுதல் வகைப்படுத்தாமல் அகற்றுதல் மற்றும் குப்பை சேகரிப்பு விதிகளை மீறுதல் போன்ற செயல்களுக்கு விதிக்கப்படும் அபராதங்கள் 2026 ஜூன் 5 முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. புதிய அரசாணையின் கீழ் முன்பு 2ஆம் வகை குற்றமாகக் கருதப்பட்ட சில விதிமீறல்கள் தற்போது 3ஆம் வகை குற்றங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதன் காரணமாக குறைக்கப்பட்ட அபராதம் €22 இலிருந்து €45 ஆகவும், சாதாரண அபராதம் €35 இலிருந்து €68 ஆகவும் தாமதமாக செலுத்தப்படும் அபராதம் […]
இங்கிலாந்தில் சட்டவிரோத குப்பை கொட்டுதல் மற்றும் கழிவு மேலாண்மை மோசடிகளை கட்டுப்படுத்த அரசாங்கம் புதிய கடுமையான சட்ட மற்றும் அடையாளச் சோதனைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது நிலவும் அமைப்பில் “இறந்த நாய்க்கும் கூட கழிவு கடத்துநராக பதிவு செய்ய முடியும்” என்ற கடும் விமர்சனங்களுக்குப் பின்னர் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்படுகின்றன. இதன் கீழ் கழிவு பொருட்களை கடத்தும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் இனி அடையாளச் சான்று குற்றப் பின்னணி மற்றும் தொழில்நுட்ப தகுதி ஆகியவற்றை நிரூபிக்க […]