இங்கிலாந்தில் சட்டவிரோத குப்பை கொட்டுதல் மற்றும் கழிவு மேலாண்மை மோசடிகளை கட்டுப்படுத்த அரசாங்கம் புதிய கடுமையான சட்ட மற்றும் அடையாளச் சோதனைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது நிலவும் அமைப்பில் “இறந்த நாய்க்கும் கூட கழிவு கடத்துநராக பதிவு செய்ய முடியும்” என்ற கடும் விமர்சனங்களுக்குப் பின்னர் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்படுகின்றன. இதன் கீழ் கழிவு பொருட்களை கடத்தும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் இனி அடையாளச் சான்று குற்றப் பின்னணி மற்றும் தொழில்நுட்ப தகுதி ஆகியவற்றை நிரூபிக்க வேண்டியிருக்கும்.
புதிய அனுமதி முறை 2027 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனுமதி பெற்ற கழிவு கடத்துநர்கள் தங்களது வாகனங்களிலும் விளம்பரங்களிலும் அதிகாரப்பூர்வ அனுமதி சான்றை வெளிப்படுத்த வேண்டும். சட்டவிரோதமாக குப்பைகளை கையாளுதல் அல்லது கொட்டுதல் போன்ற குற்றங்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கும் புதிய சட்டங்களும் கொண்டு வரப்படுகின்றன.
இங்கிலாந்து சுற்றுச்சூழல் முகமை (Environment Agency) அதிகாரிகளுக்கு மோசடி நிறுவனங்களின் அனுமதிகளை உடனடியாக ரத்து செய்யும் அதிகாரமும் வழங்கப்படவுள்ளது. அண்மையில் நாடு முழுவதும் பெருமளவிலான சட்டவிரோத குப்பை மேடுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





Leave a Reply