சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது
வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீதொட்டமுல்ல பகுதியில் நேற்று (10) வலான மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது பெருமளவு சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரின் வசமிருந்து சுமார் 90 லீட்டர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் அங்கொடை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபருடன் கைப்பற்றப்பட்ட […]
