துருக்கி பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர் துப்பாக்கிச்சூடு.
துருக்கியின் கஹ்ரமன்மராஷ் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு (14 வயது) மாணவர் துப்பாக்கியால் திடீர் தாக்குதல் நடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் 8 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் உயிரிழந்ததாகவும் மேலும் 13 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலை மேற்கொண்ட மாணவர் தன் பையில் ஐந்து துப்பாக்கிகளும் ஏழு மெகசீன்களும் கொண்டு பள்ளிக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. அவன் தனது தந்தையிடம் இருந்த ஆயுதங்களை எடுத்துச் சென்றிருக்கலாம் என்றும் அந்த தந்தை ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாணவர் இரண்டு வகுப்பறைகளில் சீரற்ற முறையில் சுட்டதாகவும் பின்னர் தானும் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவம் நடந்தபோது துருக்கி பள்ளியில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டது. மாணவர்கள் உயிர் காக்க ஜன்னல்களில் இருந்து குதித்து ஓடியதாக சாட்சிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலின் காரணம் இதுவரை தெளிவாக தெரியவில்லை.
இந்த சம்பவம் துருக்கியில் பள்ளிகளில் துப்பாக்கிச்சூடு அரிதான ஒன்று என்றாலும் இதற்கு முன்பு ஒரே நாளுக்கு முன்பு மற்றொரு பள்ளியிலும் துப்பாக்கிச்சூடு நடந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் நாட்டில் பள்ளி பாதுகாப்பு குறித்து கவலை அதிகரித்துள்ளது.
சம்பவத்துக்குப் பிறகு தாக்குதலாளியின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் முழுமையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. துருக்கி ஜனாதிபதி இரங்கல் தெரிவித்ததுடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.





Leave a Reply