ஐரோப்பிய பாராளுமன்றம் அக்டோபர் 21 அன்று நிறைவேற்றிய புதிய தீர்மானத்தின் படி அனைத்து வாகன ஓட்டிகளும் ஒவ்வொரு 15 ஆண்டுகளுக்கும் ஒருமுறை மருத்துவ பரிசோதனை (medical check-up) செய்து தங்கள் ஓட்டுநர் தகுதியை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இந்த முடிவின் நோக்கம் — ஐரோப்பிய சாலைகளில் ஏற்படும் விபத்துகளை குறைப்பது. 2024 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 20,000 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக யூரோப் எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.
யார் யார் பாதிக்கப்படுவார்கள்?
- இந்த புதிய விதி அனைத்து கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டிகளுக்கும் பொருந்தும்.
- 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கூடுதல் பரிசோதனை அவசியமாகலாம்.
- இதன்மூலம் ஆயுள் முழுவதும் செல்லும் பெர்மிட் (permis de conduire à vie) முடிவுக்கு வருகிறது.
நோக்கம்
2050 ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பிய சாலைகளில் பூஜ்ய மரணங்கள் (zero road deaths) என்ற இலக்கை அடைவதே முக்கிய குறிக்கோள்.
ஓட்டுநர் மருத்துவ ரீதியாக தகுதி அற்றவராக கருதப்பட்டால், அவரின் உரிமம் ரத்து செய்யப்படும்.
பிரான்சுக்கு 3 ஆண்டு காலம்
பிரான்ஸ் உட்பட அனைத்து நாடுகளுக்கும் இந்த புதிய விதிமுறைக்கு ஏற்ப மூன்று ஆண்டுகளில் சீரமைப்பு செய்ய நேரம் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாடும் ஓட்டுநர் பரிசோதனையை மருத்துவ பரிசோதனை அல்லது சுய மதிப்பீட்டுப் பேட்டி (auto-évaluation) என தேர்வு செய்யலாம்.
இந்த மாற்றம் சாலை விதி மீறுபவர்களுக்கும் (traffic offenders) முக்கியமானது. இனி ஒருவர் ஒரு நாட்டில் பெர்மிட் ரத்து செய்யப்பட்டால் அவர் மற்ற ஐரோப்பிய நாடுகளில் வாகனம் ஓட்ட முடியாது. தற்போது சுமார் 40% ஓட்டுநர்கள் மற்றொரு நாட்டில் தண்டனை பெற்றபோதும் தப்பி விடுகின்றனர் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மொத்தத்தில் இந்த புதிய சட்டம் சாலைப் பாதுகாப்பை உயர்த்தவும், ஐரோப்பா முழுவதும் ஒரே விதமான ஒழுங்கை உருவாக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.





Leave a Reply