பிரான்சில் வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது சில département களில் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ள உடனடி ஓட்டுநர் உரிமம் (permis) இடைநீக்கம் நடைமுறையை நாடு முழுவதும் விரிவுபடுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
பிரான்ஸ் உள்துறை அமைச்சகத்துடன் இணைந்த குடியுரிமை விவகார அமைச்சர் Marie-Pierre Vedrenne வாகனம் ஓட்டும் போது மொபைல் பயன்படுத்துவது சாலை விபத்துகளுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டில் சாலை மரணங்கள் 15% அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது இந்த கடுமையான நடவடிக்கை Landes, Lot-et-Garonne, Pas-de-Calais மற்றும் Charente-Maritime ஆகிய நான்கு département-களில் சோதனை முறையில் நடைமுறையில் உள்ளது. இந்த பகுதிகளில் ஓட்டுநர் மொபைல் பயன்படுத்தியதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கூட உடனடியாக இரண்டு மாதங்கள் வரை ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம் செய்யப்படலாம்.
பொதுவாக பிரான்சில் வாகனம் ஓட்டும் போது மொபைல் பயன்படுத்தினால் €135 அபராதமும் 3 points குறைப்பும் வழங்கப்படுகிறது. ஆனால் புதிய சோதனை நடைமுறையில் கூடுதல் தவறு இல்லாவிட்டாலும் permis suspension வழங்கப்படுவது முக்கிய மாற்றமாகும்.
Landes பகுதியில் 2025 நவம்பர் முதல் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து சுமார் 450 ஓட்டுநர் உரிமங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக prefecture தெரிவித்துள்ளது.





Leave a Reply