லண்டன் – ஒரே இடத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்கான புதிய அதிகாரங்களை பிரிட்டிஷ் காவல்துறைக்கு வழங்க இருப்பதாக அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
இது ஒரு சினகோகில் நிகழ்ந்த கொலைவெறி தாக்குதலுக்குப் பிறகு ரத்து செய்யுமாறு கோரப்பட்டபோதிலும் சனிக்கிழமை நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டது. உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்த புதிய சட்டத்தின் மூலம் மூத்த காவல்துறை அதிகாரிகள் முந்தைய போராட்டங்களின் மொத்த தாக்கத்தை உள்ளூர் சமூகத்தின் மீது பரிசீலித்து தேவையான கட்டுப்பாடுகளை விதிக்க முடியும்.
“போராட்டம் நடத்தும் உரிமை எங்கள் நாட்டில் ஒரு அடிப்படை சுதந்திரம். எனினும் இந்த சுதந்திரம் அவர்களது அயலவர்கள் பயமின்றி வாழும் உரிமையுடன் சமநிலைப்படுத்தப்பட வேண்டும்,” என உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது,
“பெரிய அளவிலான மீண்டும் மீண்டும் நடைபெறும் போராட்டங்கள் குறிப்பாக மத சமூகங்களில் பாதுகாப்பின்மை, அச்சம் மற்றும் வீட்டைவிட்டு வெளியே வரத் தயக்கம் போன்ற உணர்வுகளை உருவாக்குகின்றன,” என்றும் யூத சமூகத்தின் பாதுகாப்பு குறித்த கவலைகளை சுட்டிக்காட்டினார்.
கடந்த சனிக்கிழமை லண்டன் நகர மையத்தில், பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தின் போது காவல்துறை 500 பேரை கைது செய்தது. இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்த “Palestine Action” என்ற அமைப்பு, கடந்த ஜூலை மாதம் ஏர்பேஸில் புகுந்து இராணுவ விமானங்களுக்கு சேதம் விளைவித்ததற்குப் பிறகு தடைசெய்யப்பட்டது.





Leave a Reply