எல்பிட்டியா – சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் ரூ. 15.5 இலட்சம் பெறுமதியான நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும், ரூ. 1.2 மில்லியன் செலவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கான கட்டிடத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வும் அண்மையில் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது.
மருத்துவமனை மேம்பாட்டுக் குழுவின் ஆதரவுடன் பிசியோதெரபி பிரிவுக்கு ரூ. 1.55 மில்லியன் மதிப்புள்ள இரண்டு நவீன இயந்திரங்கள் வழங்கப்பட்டன. மேலும், ரூ. 1.2 மில்லியன் செலவில் மருத்துவமனை பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கான கட்டிடத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. நாட்டில் செயல்படாத நிலையில் காணப்படும் வைத்தியசாலை மேம்பாட்டுக் குழுக்களை மீண்டும் செயல்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது சுகாதார அமைச்சினை பொறுப்பு ஏற்ற பிறகு எடுக்கப்பட்ட முதல் பணி மருத்துவமனை மேம்பாட்டுக் குழுக்களை முறைப்படுத்துவதாக இருந்தது. தேசிய மருத்துவமனை முதல் ஆரம்ப சுகாதாரப் பிரிவு வரை, செயல்படாத மருத்துவமனை மேம்பாட்டுக் குழுக்களை மீண்டும் செயலில் கொண்டுவரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமைச்சர் குறிப்பிட்டதாவது வாக்குறுதிகளின் அரசியலை அல்ல திட்டமிட்ட செயல்முறையால் நாட்டின் மருத்துவமனைகளை அபிவிருத்தி செய்வதே எங்கள் நோக்கம். தென் மாகாணம் உட்பட தீவு முழுவதும் மருத்துவமனைகள் அபிவிருத்தி செய்யப்படும்.
மருத்துவமனை மேம்பாட்டுக் குழு லாட்டரி மூலம் பெற்ற வருவாயிலிருந்து ரூ. 1.5 மில்லியன் ஒதுக்கி, அல்ட்ராசவுண்ட் இயந்திரம் மற்றும் சக்கர நாற்காலி வழங்கியது. அதேபோல், காவல்துறை கட்டிடமும் மருத்துவமனைக்கு அவசியமானதாக அமைந்தது.
அமைச்சர் மருத்துவமனையின் அவசரகால பிரிவு, ஆய்வகம் மற்றும் பிற பிரிவுகளை பார்வையிட்டு, ஊழியர்களுடன் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிஷாந்த பெரேரா டி.கே. ஜெயசுந்தர மாகாண சபைத் தலைவர் சனத் பிரைமயந்த சுமனசிறி, தெற்கு மாகாண சுகாதார சேவைகள் இயக்குநர் டாக்டர் என்.ஜி.எஸ். பண்டிதரத்ன மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் பிரௌசாத் ரணவீர உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.





Leave a Reply