டென்மார்க் குடிவரவு சேவை (Danish Immigration Service) 2026 ஏப்ரல் 20ஆம் தேதி புதிய டிஜிட்டல் பாஸ்போர்ட் விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த புதிய முறையின் மூலம் வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் மற்றும் அகதிகள் உள்ளிட்டோர் தங்கள் பாஸ்போர்ட் விண்ணப்பங்களை முழுமையாக ஆன்லைன் முறையில் எளிதாக சமர்ப்பிக்க முடியும். இதன் முக்கிய நோக்கம் விண்ணப்ப செயல்முறையை வேகமாகவும் சுலபமாகவும் மாற்றுவது மட்டுமல்லாமல் அதிகரித்து வரும் விண்ணப்ப எண்ணிக்கையை திறம்பட கையாளுவதும் ஆகும்.
இந்த புதிய டிஜிட்டல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தலாம் மேலும் தங்களின் விண்ணப்ப நிலையை நேரடியாக கண்காணிக்கவும் முடியும்.
இதற்கு முன்பு சில செயல்முறைகள் நேரில் அல்லது அச்சு படிவங்களின் மூலம் செய்யப்பட்டன ஆனால் இப்போது அவை பெரும்பாலும் ஆன்லைன் சுயசேவை முறையாக மாற்றப்பட்டுள்ளன.
மேலும் பாஸ்போர்ட் விண்ணப்பங்களில் முகபடம் மற்றும் விரல் ரேகை போன்ற பயோமெட்ரிக் தகவல்களை பதிவு செய்வது அவசியம் தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல்கள் விண்ணப்பத்தை சரிபார்க்கவும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பயன்படுத்தப்படும்.






























