அமெரிக்கா – ஈரான் பதற்றம், சுலைமானியின் உறவினர்கள் கைது விவகாரம்.

அமெரிக்காவில் 2020ஆம் ஆண்டு ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்த ஈரான் இராணுவத் தளபதி காசிம் சுலைமானியின் (Qassem Soleimani) அண்ணி மகள் மற்றும் அவரது மகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ அவர்கள் இவ்விருவரின் நிரந்தர குடியுரிமை (Green Card) ரத்து செய்யப்பட்டதாகவும் தற்போது அவர்கள் குடியேற்ற அமலாக்கத்துறை (ICE) காவலில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

அமெரிக்க அதிகாரிகளின் குற்றச்சாட்டுப்படி குறித்த பெண்கள் சமூக வலைதளங்களில் ஈரான் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்ததுடன், அமெரிக்காவுக்கு எதிரான கருத்துகளையும் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக இவர்களின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2020ஆம் ஆண்டு ஈராக் நாட்டின் பக்தாத் அருகே அமெரிக்காவின் விமானத் தாக்குதலில் காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அவர் ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் முக்கியத் தலைவராக இருந்தார். இந்நிகழ்வு அமெரிக்கா – ஈரான் உறவில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading