இளைஞர்கள் கைது – பிரான்ஸ் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை.
பிரான்சின் Val-de-Marne பகுதியிலுள்ள Fresnes நகராட்சி அலுவலகம் கடந்த மார்ச் 27 ஆம் தேதி இரவு சில இளைஞர்களால் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பலர் மீது விசாரணை நடைபெற்றது.
இந்த தாக்குதலில் முகமூடி அணிந்த குழு கட்டிடத்திற்குள் நுழைந்து கதவுகள், மேசைகள், கணினிகள் உள்ளிட்ட பொருட்களை உடைத்து பெரும் சேதத்தை ஏற்படுத்தினர். மேலும் அருகிலிருந்த சில கடைகளும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் 14 முதல் 16 வயதுக்குட்பட்ட பல இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களில் சிலர் நீதிமன்ற கட்டுப்பாட்டின் கீழ் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். அதேசமயம் கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக கூறப்படும் இரண்டு இளைஞர்கள் மீண்டும் கைது செய்யப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் அரசியல் மாற்றம் நடந்த காலகட்டத்தில் இடம்பெற்றதால் இது ஜனநாயக அமைப்புகளுக்கு எதிரான தாக்குதல் என அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.





Leave a Reply