பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள வழக்கு நடுவர் அலுவலகம், சீன நிறுவனமான TikTok பயன்பாட்டின் ஆல்கொரிதம் குறித்து முன்னோட்ட விசாரணை ஒன்றை தொடங்கியுள்ளது. இது பிரான்ஸ் தேசிய சட்டமன்ற உறுப்பினர் ஆர்த்தர் டெலபோர்ட் (PS) தலைமையிலான நாடாளுமன்ற விசாரணைக் குழுவின் அறிக்கையைத் தொடர்ந்து வந்துள்ளது.
அவரது அறிக்கையில் TikTok இன் பரிந்துரைக் கணினி அமைப்பு (Algorithm) சில மன அழுத்தம் அல்லது பலவீனம் உள்ள சிறார்களை தற்கொலையின்பால் தள்ளக்கூடும் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
பாரிஸ் பொது வக்கீல் லோர் பெக்குவா கூறியதாவது
- தற்கொலை செய்ய உதவும் முறைகள் அல்லது பொருட்களை பரப்புதல் அல்லது ஊக்குவித்தல் குற்றமாகும்.
- இது நிரூபிக்கப்பட்டால், 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் €45,000 அபராதம் விதிக்கப்படலாம்.

மேலும் TikTok மூலம் சட்டவிரோத பரிவர்த்தனைகளை எளிதாக்கும் வாய்ப்பு இருப்பதையும் விசாரணை குழு கவனத்தில் எடுத்துள்ளது.
ஆர்த்தர் டெலபோர்ட் குறிப்பிட்டதாவது
“TikTok பயன்பாட்டை சிறார்கள் மிகவும் எளிதாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதில் உள்ள ஆல்கொரிதம், மன வலிமை குறைந்த அல்லது பாதிப்புக்குள்ளான சிறார்களை ஆபத்தான உள்ளடக்கங்களின் பக்கம் இட்டுச் செல்லும் ஆபத்து உள்ளது.”
TikTok தரப்பின் பதில்?
இந்நிலையில் TikTok இதுவரை அதிகாரப்பூர்வ பதிலை வெளியிடவில்லை. ஆனால், கடந்த காலங்களில் நிறுவனம், “சிறார்களைப் பாதுகாக்க பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன” என்று பல முறை தெரிவித்திருந்தது.
பிரான்ஸ் அரசு மற்றும் சமூக நல அமைப்புகள், சிறார்களின் இணைய பயன்பாட்டில் போட்டித் தன்மை மற்றும் மனநல ஆபத்துகளைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.





Leave a Reply