பிரான்ஸின் போர்டோவில் 2026 ஜனவரி 8ஆம் தேதி உயிரிழந்த ஒரு புதிதாக பிறந்த குழந்தையின் மரணம் பயன்படுத்திய பால் பொடியுடன் தொடர்புடையதல்ல என்று தற்போதைய விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிசம்பர் 25ஆம் தேதி பிறந்த அந்த குழந்தை போர்டோ அருகிலுள்ள பெசாக் நகரில் உள்ள Haut Lévêque மருத்துவமனையில் உயிரிழந்தது. மடப்பேறு மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பிறகு ஜனவரி 5 முதல் 7 வரை அந்தக் குழந்தைக்கு இரண்டு வகையான செயற்கை பால் கொடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதில் ஒன்றாக இருந்த Guigoz பிராண்டு பால், Bacillus cereus என்ற பாக்டீரியா மற்றும் அது உருவாக்கக்கூடிய cereulide என்ற நச்சு காரணமாக முன்பு மீள அழைக்கப்பட்டிருந்தது. இந்த நச்சு சில நேரங்களில் உணவு உட்கொண்ட சில மணி நேரங்களுக்குள் கடுமையான வாந்தியை ஏற்படுத்தக்கூடும். குழந்தையின் மரணத்துக்குப் பிறகு போர்டோ அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் மற்றும் மக்கள் பாதுகாப்புத் துறை (DDPP) இணைந்து விசாரணையை தொடங்கின.
ANSES நிறுவனம் முதலில் மேற்கொண்ட பரிசோதனைகளில் பால் பொடியில் அல்லது தயாரிக்கப்பட்ட பாலில் அந்த நச்சு இருப்பது கண்டறியப்படவில்லை. இருப்பினும் மேலும் துல்லியமான பரிசோதனைக்காக மாதிரிகள் பெல்ஜியத்தில் உள்ள Sciensano ஆய்வகத்திற்கும் அனுப்பப்பட்டன. மார்ச் 4ஆம் தேதி கிடைத்த புதிய பரிசோதனை முடிவுகளும் முந்தைய முடிவுகளை உறுதிப்படுத்தி cereulide நச்சு இருப்பதை கண்டறியவில்லை.
எனவே தற்போதைய நிலவரப்படி குழந்தையின் மரணம் செயற்கை பாலுடன் தொடர்புடையதல்ல என கூறப்பட்டாலும், மரணத்தின் உண்மையான காரணத்தை கண்டறிய நீதிமரபியல் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.





Leave a Reply