அமெரிக்க அதிபர் Donald Trump, ஈரானுடன் எந்த சமாதான ஒப்பந்தமும் அல்லது பேச்சுவார்த்தையும் நடைபெறாது என்று கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
ஈரான் “முழுமையான சரணடையாவிட்டால்” (Unconditional Surrender) அமெரிக்கா எந்த உடன்படிக்கையும் செய்யாது என்று அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், ஈரான் முழுமையாக சரணடைந்த பிறகு அந்நாட்டில் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய தலைமையைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும், அதன் பின்னர் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகள் இணைந்து ஈரானின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவோம் என்றும் அவர் கூறினார்.
மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பின்னர் பிராந்தியத்தில் போர் நிலைமை தீவிரமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதே நேரத்தில், ஈரான் தலைவர் அமைப்பில் மாற்றங்கள் குறித்து சர்வதேச அளவில் கவனம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் இந்த கடுமையான நிலைப்பாடு அமெரிக்கா–ஈரான் உறவுகளை மேலும் பதற்றமான கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.





Leave a Reply