குவைத் அரசாங்கம் புனித ரம்ஜான் மாதத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக யாசகம் பெற்ற வெளிநாட்டவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையும் அடங்கும். சமீபத்தில் 8 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 11 வெளிநாட்டவர்கள் பள்ளிவாசல்கள் மற்றும் சந்தைகளுக்கு முன்னால் யாசகம் பெற்றபோது கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ரம்ஜான் மாதத்தில் காரணமின்றி பொது இடங்களில் உணவு உட்கொள்வது, நீர் மற்றும் பானங்கள் அருந்துவது அல்லது புகைபிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குவைத் அரசாங்கம் அறிவித்துள்ளது.





Leave a Reply