பரீட்சை அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் எதுவும் தேவைப்பட்டால் மாணவர்கள் முன்கூட்டியே அதனை சரிபார்க்க வேண்டும்.

பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல் அமித் ஜெயசுந்தர நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது பரீட்சை அனுமதி அட்டைகள் (Admission Cards) ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன, மேலும் அவை மாணவர்களுக்கு விநியோகிக்கப்படவிருக்கின்றன. அத்துடன் பரீட்சை அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் தேவைப்பட்டால் பாடசாலை மாணவர்கள் பாடசாலை அதிபரின் உதவியுடன் 2025 மார்ச் 10 ஆம் தேதிக்கு முன்னதாக பரீட்சைத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் மாற்றங்கள் செய்யலாம் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் 2024 (2025) ஆம் ஆண்டு G.C.E. Ordinary Level (O/L) பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கான அனைத்து துணை வகுப்புகள் சொற்பொழிவுகள், பணிமனைகள் மற்றும் தொலைதூர உதவிகள் (All tuition classes, lectures, workshops, and remote assistance) அடுத்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) முதல் தடைசெய்யப்பட்டுள்ளது.

பரீட்சைகள் துறை அறிவிப்பின்படி இந்தத் தடை 2025 மார்ச் 11 ஆம் தேதி நள்ளிரவிலிருந்து பரீட்சை முடியும் வரை செயல்படுத்தப்படும்.

2024 (2025) ஆம் ஆண்டு G.C.E. O/L பரீட்சை 2025 மார்ச் 17 முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறும். நாடு முழுவதும் 3,663 பரீட்சை மையங்களில் 474,147 மாணவர்கள் இந்தப் பரீட்சைக்காக தயார்நிலையில் உள்ளனர்.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading