இலங்கையில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் உள்ள நிலங்களை அபகரிக்கும் நோக்கில் வெளியிடப்பட்ட வர்த்தமானி.
ஜனவரி 2025 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஜனாதிபதி திசாநாயக்க அவர்கள், மக்களுக்கு சொந்தமான நிலம் அவர்களிடம் தான் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அரசாங்கம் வளர்ச்சி திட்டங்கள் அல்லது பாதுகாப்பு தேவைகளுக்காக நிலங்களை கைப்பற்றும் அதிகாரம் கொண்டிருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று நிலம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
ஆனால் அவ்வாறில்லாது தற்போது வெளியிடப்பட்டுள்ள அரச வர்த்தமானியில் தமிழ் மக்களது பிரதேசங்களில் உள்ள நிலங்களை உறுதிப்படுத்தப்படாத பட்சத்தில் இலங்கை அரசு குறித்த நிலங்களை அரசுடைமையாக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புகளின் கீழ் மொத்தம் சுமார் 5,900 ஏக்கர் நிலங்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தபடுகிறது.
பிடித்துக்கொள்ளப்பட்ட முக்கிய இடங்கள் மற்றும் மாவட்டங்கள்
வலயன்மடம் மற்றும் இரட்டைவாய்க்கால் – 414 ஏக்கர் (அண்ணளவாக)
முள்ளிவாய்க்கால் – 934 ஏக்கர் (அண்ணளவாக)
புதுமட்டளான் மற்றும் அம்பலவான் பொக்கணை – 354 ஏக்கர் (அண்ணளவாக)
மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இரணைப்பளை, செம்மங்குண்ணு, அம்பலவான் பொக்கணை, மட்டளான், வலயன்மடம், முள்ளிவாய்க்கால் போன்ற கிராமங்களிலும் நிலங்கள் பிடித்துக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலங்கள் பெரும்பாலும் தமிழ் மக்களுக்கு சொந்தமான விவசாய நிலங்கள் மற்றும் வாழ்விடங்களாகவே காணப்படுகின்றது.
(இவை தவிர ஏற்கனவே சுண்டிக்குளம், நாயாறு, நந்திக்கடல் போன்ற நீர்நிலைகளுக்கு அருகிலுள்ள சுமார் 69,000 ஏக்கர் நிலங்கள் மற்றும் வனவிலங்கு திணைக்களம் சுமார் 29,400 ஏக்கர் நிலங்களைப் பிடித்துக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.)
இந்த நிலங்களைப் பற்றிய மேலதிக தகவல்களுக்கு, அதிகாரப்பூர்வ வர்த்தமானி அறிவிப்புகளைப் பார்க்கலாம்
முழுமையான தகவல்களுக்கு
முக்கிய குறிப்பு
அரசாங்கம் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்புகளின் படி, உங்கள் நில உரிமையை நிரூபிக்க மூன்று மாத காலக்கெடு உள்ளது. எனவே, உங்களது காணிகள் தொடர்பான உறுதிகளை அல்லது அதன் சார்ந்த ஆவணங்களை உறுதிப்படுத்துவதன் ஊடாக உங்களது நிலங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
அத்தோடு வெளிநாட்டில் வாழும் சொந்தங்கள் மேலே காணொளியில் குறிப்பிட்ட வகையில் உங்களது உறவினர்களோ அல்லது தெரிந்த ஒருவரின் ஊடாக உங்களது நிலங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மிக விரைவாக மேற்கொள்ளுங்கள்.





Leave a Reply