இலங்கையில் அரசு சேவைகளைப் பெற தற்போது மக்கள் பல்வேறு தளங்களில் தனித் தனியே தகவல்கள் உள்ளிட வேண்டும் பல அடுக்குகளில் அங்கீகாரம் செய்ய வேண்டும் என்பதால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த சீரற்ற செயல்முறை காரணமாக ஆண்டுதோறும் ரூ.500 மில்லியனுக்கும் மேல் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சிக்கலைத் தீர்க்கவும், நாட்டின் டிஜிட்டல் பொருளாதார யோசனையை முன்னெடுக்கவும், அனைத்து அரசு சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் “Government SuperApp” உருவாக்கத்தை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
இந்த திட்டம் 18 வயதுக்கு மேற்பட்ட 1 கோடி 40 லட்சத்திற்கும் மேற்பட்ட குடிமக்களும், ஆண்டுதோறும் வரும் 20 லட்சம் வெளிநாட்டு பயணிகளும் ஒரே மொபைல் மற்றும் இணைய தள பயன்பாட்டின் மூலம் அரசு சேவைகளை எளிதில் பெறும் வகையில் அமையும்.
இரு கட்டங்களாக 2025–2026 காலப்பகுதியில், மொத்தம் ரூ.500 மில்லியன் செலவில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சரவை அறிவித்துள்ளது.





Leave a Reply