ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) அவசர மருத்துவ சேமிப்புகளைப் பயன்படுத்தி நெருக்கடி சூழ்நிலையில் எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை பரிசோதிக்கும் வகையில் பின்லாந்து மற்றும் நோர்வே நாடுகளின் அவசரநிலை மீட்பு படையினர் இணைந்து இரண்டு நாள் கிரைசிஸ் ரெடினஸ் (Crisis Readiness) பயிற்சியை நடத்தினர். இந்த பயிற்சி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
இந்த உருவக (imaginary) சூழலில் நோர்வே அரசு தங்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் பிற மருத்துவப் பொருட்களை EU-வின் rescEU என்ற அவசர கையிருப்பு கிடங்குகளில் இருந்து அனுப்புமாறு பின்லாந்திடம் கோரிக்கை விடுக்கும் நிகழ்வாக கதை அமைக்கப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, EU-வின் rescEU திட்டத்தின் கீழ் பின்லாந்தில் பல்வேறு அவசர மருத்துவப் பொருட்கள் சேமிக்கப்பட்டுள்ளன. இதில் மருந்துகள், அளவிடும் கருவிகள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) போன்றவை அடங்கும்.
இந்த பெரிய அளவிலான கையிருப்புகளை அமைக்கவும் பராமரிக்கவும் ஐரோப்பியக் கமிஷன் பின்லாந்துக்கு 300 மில்லியன் யூரோவை (சுமார் 2,700 கோடி இந்திய ரூபாய்) நிதியுதவியாக வழங்கியுள்ளது.
இந்த இரண்டு நாள் கூட்டு பயிற்சியின் மூலம், பின்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகளின் முதலாவது பதிலளிப்பு குழுக்கள் (First Responders) நெருக்கடி நேரத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான திறனை மேம்படுத்திக் கொண்டன. இது எதிர்காலத்தில் இயற்கை பேரழிவு, தொற்றுநோய் பரவல் அல்லது பிற அவசரநிலைகளில் EU நாடுகளுக்கு விரைவான உதவி வழங்குவதற்கு முக்கிய முன்னேற்பாடாகும்.





Leave a Reply