புதன்கிழமை, பிரான்ஸ் பொருளாதார அமைச்சகம் ஒரு “தீங்கிழைக்கும் நபர்” 1.2 மில்லியன் வங்கிக் கணக்குகளை சட்டவிரோதமாக அணுகியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த பெரிய அளவிலான தரவு மீறல், வங்கிக் கணக்குகளின் தேசிய பதிவேடான FICOBA தரவுத்தளத்தை குறிவைத்து நடத்தப்பட்டது. அரசு ஊழியரைப் போல ஆள்மாறாட்டம் செய்த அந்த நபர், கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர், முகவரி, வங்கி விவரங்கள் (RIB/IBAN) மற்றும் சில சந்தர்ப்பங்களில் வரி அடையாள எண்களையும் அணுகியுள்ளார்.

ஜனவரி 2026 இறுதி முதல் இந்த மோசடி நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் கண்டறியப்பட்ட உடனே அணுகல் கட்டுப்பாடுகள் வலுப்படுத்தப்பட்டு தாக்குதல் நிறுத்தப்பட்டது.

பாதிக்கப்பட்ட 1.2 மில்லியன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வரும் நாட்களில் அவர்களது வங்கிகள் மூலம் தனிப்பட்ட அறிவிப்பு வழங்கப்படும் என்றும், தகவல் பாதுகாப்பை வலுப்படுத்த அரசு மற்றும் சைபர் பாதுகாப்பு அமைப்புகள் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Contact NS (Nerikkalam.Info)

வணக்கம்
உங்களுடைய அவசர தேவை கருதி நீங்கள் நிரோஷ் சந்துருவை தொடர்புகொள்ள விரும்புகிறீர்கள்,

Nirosh_Santhuru

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading